சிற்பம்
வீரபத்திரர்
வீரபத்திரர்
| சிற்பத்தின் பெயர் | வீரபத்திரர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
| ஊர் | தாராசுரம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | கருங்கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
|
விளக்கம்
சிவபெருமானின் அகோர வடிவங்களில் ஒன்றான வீரபத்திரர்
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
தட்சனையும் , அவனது யாகத்தையும் அழிக்க சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் வீரபத்திரர். வீரம் என்பதற்கு அழகு என்றும், பத்திரம் என்பதற்கு காப்பவன் என்றும் பொருள். சிவபெருமானுக்குரிய அவிர் பாகத்தைத் தராது தட்சன் நடத்தும் வேள்வியில் பங்கு கொண்ட பிரம்மன், இந்திரன், சூரியன், சந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமை வீரபத்திரர் தன்னுடைய சூலத்தால் நையப் புடைக்கிறார். இக்காட்சியே இங்கு சிற்ப வடிவில் காட்டப்பட்டுள்ளது. தேவர்கள் உயிருக்கு பயந்து ஓடிய நிலையில் கீழே விழுந்துள்ளனர். இரு கைகளை கூப்பி மன்னிப்பு கோருகின்றனர். வீரபத்திரர் ஜடாபாரம் கொண்டுள்ளார். நீண்ட சூலத்தை கையில் கொண்டு பாய்ந்த நிலையில் தாக்குகிறார்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
வீரபத்திரர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 27 |
| பிடித்தவை | 0 |