Back
சிற்பம்
வாகீசர் (நான்முகன்)
சிற்பத்தின் பெயர் வாகீசர் (நான்முகன்)
சிற்பத்தின்அமைவிடம் செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
ஊர் செந்தலை
வட்டம் திருக்காட்டுப்பள்ளி
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
விளக்கம்
a:1:{i:0;s:1726:"சிவ வடிவங்களுள் ஒன்றான வாகீசர் பிரம்மனைக் குறிக்கும். சிவபெருமானைப் போன்று பிரம்மனும் ஐந்து தலைகளைக் கொண்டவர். படைப்புக் கடவுளான பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஒன்றை சிவபெருமான் கொய்தவுடன் நான்முகனாய் படைப்புத் தொழிலைத் தொடங்குகிறார் என்பது தொன்மம். வாகீசர் சிற்பங்கள் திருவையாறு சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் கிடைத்துள்ளன. செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவர்ர் கோயிலில் உள்ள வாகீசரின் இச்சிற்பம் தாமரைபீடத்தில் சுகாசனத்தில் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டபடி அமர்ந்த கோலம். நான்முகனாய் நான்கு திருக்கைகளில் அக்கமாலையும், தாமரை மலர்களும் விளங்கிட அமைதி தவழும் முகத்தினராய் சோழர்கால கலைப்பாணியில் வாகீசர் விளங்குகிறார்.";}
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இத்தலத்தில் நான்முகனின் சிற்பம் தாமரை மீது அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இச்சிற்பத்தின் உருவமைதியும், கலைப்பாணியும் தனித்துவம் வாய்ந்தது.  இவ்வடிவம் சிவ வடிவங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. வாகீசர் என இவ்வடிவத்தில் அழைக்கப்படும் இறைவடிவம் நான்முகனின் உருவமைதியையும், படிமக் கோலத்தையும் பெற்று விளங்குவது சிற்பாகம மரபு.
குறிப்புதவிகள்
வாகீசர் (நான்முகன்)
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்