சிற்பம்
அரசன் மற்றும் தேவி
சிற்பத்தின் பெயர் அரசன் மற்றும் தேவி
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை அரச உருவம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
தன்னை பணிந்து வணங்கும் தன் தேவியின் தலையை ஆதுரத்துடன் தொட்டு அன்பை வெளிப்படுத்தும் அரசர்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
அரசனும் அவன் தேவியும் இணைகளாக அக வாழ்வில் ஈடுபட்டு நிற்கும் காட்சி. தேவி இரு கைகளைக் கூப்பி தன் தலைவனை வணங்குகிறாள். வணங்கும் அவள் கைகளை தன் இடது கையால் பிடித்தவாறு, தன் வலது கையால் அவளின் உச்சந்தலையை அன்புடன் தொட்டு வருடும் அரசன். அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்? என்னும் குறளின் நெறியை இச்சிற்பம் விளக்குகிறது. தேவிக்கு நீண்ட சடைப் பின்னல் உள்ளது. அதன் நுனியில் அவள் குஞ்சம் அணிந்துள்ளாள். நேர்வகிட்டில் தொய்யகம் எனப்படும் நெற்றிச்சுட்டி அணி செய்கின்றது. அரசன் அளகசூடகம் என்னும் தலைக்கோலத்தைக் கொண்டுள்ளார். செவி, கழுத்து, கை, கால்களில் முத்து, இரத்தினம், பொன்னாலான அணிகள் விளங்குகின்றன. இருவரும் கணுக்கால் வரையிலான ஆடை அணிந்துள்ளனர். அரசன் கால்களில் பாதுகையோடு காட்சியளிக்கிறார்.
குறிப்புதவிகள்
அரசன் மற்றும் தேவி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்