சிற்பம்

உமையொருபாகர்
சிற்பத்தின் பெயர் | உமையொருபாகர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில் |
ஊர் | திருக்கோழம்பம் |
வட்டம் | திருவிடைமருதூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில் கருவறை விமானம் மேற்கு பஞ்சரக் கோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / செம்பியன்மாதேவியார் |
விளக்கம்
a:1:{i:0;s:3938:"அர்த்தநாரீசுவரர் நந்தியின் மீது ஒயிலாக சாய்ந்தபடி உள்ளார். இடது காலை ஊன்றி, வலது காலை தளர்வாக வைத்த வைஷ்ணவ நிலையில் நிற்கிறார். உமையொரு பாகன் சிற்பத்தில் வலது பாதி சிவனாகவும், இடது பாகம் உமையாகவும் அமைந்துள்ளது. தலையில் வலதுபுறம் ஜடாமகுடமாகவும், இடது பகுதியில் கரண்ட மகுடமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. நெற்றிப்பட்டை சிவனுக்கு மணிகள் பதித்ததாகவும், உமைக்கு தொய்யகமாகவும் காணப்படுகின்றன. நெற்றியில் வலது பக்கத்தில் முக்கண் உள்ளது. நீள்காதுகளில் அம்மை குதம்பையும், பெருமகனார் நாககுண்டலமும் அணிந்துள்ளனர். கழுத்தில் சிவ பாதியில் கண்டிகையும், சரப்பளியும், அரும்புச்சரமும், பெண் பாதியில் மணிமாலை, முத்துச்சரமும் அணியப்பட்டுள்ளன. மார்பில் முப்புரி நூல் வலதில் பட்டையாகவும், இடது புறம் செல்லும் போது நூலாகவும் பிரிந்து செல்கிறது. மாதொரு பாகரின் தோளில் வாகுமாலை உள்ளது. மாதுக்கு காட்டப்படவில்லை. வயிற்றில அணிந்துள்ள உதரபந்தமும் இருபாதியான வடிவமைப்புகளை கொண்டு விளங்குகிறது. தேவிக்கு இடது கையும், பெருமானுக்கு வலது இரு கைகளும் காட்டப்பட்டுள்ளன. தேவி தன் இடது கரத்தில் மலர் ஒன்றை பிடித்துள்ளார். கைகளில் மகர பூரிமம் அமைந்த தோள்வளையும், நான்கு முன்வளைகளும் அணிந்துள்ளார். அம்மையப்பருக்கு பின்புறமாக நிற்கும் நந்தியின் தலைமீது இறையனார் தன் வலது முன் கையை ஊன்றியுள்ளார். இறையனார் கையில் தோள் வளையாக நாகாபரணம் அணிந்துள்ளார். இருவருக்கும் விரல்களில் வளையங்கள் உள்ளன. இடையில் அரைப்பட்டிகை முகப்புடன் கூடியதாக உள்ளது. மேகலை அணியப்பட்டுள்ளது. சிவனார் அரையாடையும், உமையாள் மடிப்புகளுடன் நீண்ட பட்டாடையும் அணிந்துள்ளனர். உமையும் சிவனும் ஒன்றிணைந்த திருக்கோலம்.";}
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருக்கோழம்பம் என்னும் தலத்தில் அமைந்துள்ள இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் 35-ஆவது திருத்தலமாகும். அப்பரும், திருஞானசம்பந்தரும் இத்தலத்தைப் பாடிப் பரவியுள்ளனர். முற்காலச் சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த திருக்கோழம்பநாதர் கோயில் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி அவர்களால் கட்டப்பட்ட கலைக்கோயிலாகும். இங்குள்ள சிற்பங்களின் உருவமைதி மிகவும் எழில் வாய்ந்தவை. இச்சிற்பம் சக்தியும் சிவமும் இணைந்து இப்பிரபஞ்சத்தைச் செலுத்துவதாகக் குறித்துக் காட்டுவதாகும் மற்றும் உயிர்களைப் படைத்தல் ஆண் பெண் சமத்துவத்தை உலகுக்குரைக்கும் சிறப்பு பெற்றது. அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைகின்றது. சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவாகும். அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி பழைய பாடல்களிலே காணலாம். "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்" என ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து இவ்வடிவத்தினைக் கூறுகிறது. "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்" என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து இதனையே கூறுகிறது. தேவாரப் பதிகங்களிலும் "வேயுறு தோளி பங்கன்", "வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர்" எனப்படுவது உமையொரு பாகனேயேயாம். குடந்தைக் கீழ்க்கோட்டம் கருவறை விமானத்தின் மேற்குப்புற தேவகோட்டத்தில் நந்தி வாகனத்தின் மீது சாய்ந்த நிலையில் உமையொருபாகர் காணப்படுகிறார். வலது முன்கை முழங்கையை நந்தியின் மீது ஊன்றியுள்ளார். வலது மேற்கை மழுவைத் தாங்கியுள்ளது. உமைக்குரிய இடது பாகத்தில் ஒரு கை மட்டுமே காட்டப்பட்டுள்ளது. உமையாள் வளைந்த இடையில் முழங்கையை ஊன்றி, கையில் மலரைப் பிடித்துள்ளாள். பொன்மணித் தோள்வளை, நூபுரம் கால்களில் பொன்னிறக் கைகளில் கொஞ்சிடும் கங்கணம் துன்னிடும் நாகமே தோள்வளை யாகுமே தூயவன் பாதமும் பூணுமே நாகமே என்று அம்மையப்பரின் அணிகள் ஆதிசங்கரரால் வருணிக்கப்படுகின்றன.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |