சிற்பம்
ஆடல்வல்லான்
சிற்பத்தின் பெயர் ஆடல்வல்லான்
சிற்பத்தின்அமைவிடம் திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில்
ஊர் திருக்கோழம்பம்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில் கருவறை விமானம் தென்புற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / செம்பியன்மாதேவியார்
விளக்கம்
a:1:{i:0;s:3786:"கருவறைச் சுற்றின் தென்புறத்தில் அர்த்த மண்டப பஞ்சரக் கோட்டச் சிற்பமாக காட்டப்பட்டுள்ள ஆடல்வல்லான் சிற்பம் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்புமாய் அப்பரின் பாடல் வரிகளை உருவமாக பிரதிபலிப்பதாக உள்ளது. சிவன் கோயில்களில் இத்தகு வடிவத்தில் கூத்தரசர் திகழ்கிறார். இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை, படைத்தலையும், அடைக்கலம் தரும் கை, காத்தலையும், தீச்சுவாலை, அழித்தலையும், தூக்கிய கால்கள் அருளல் ஆகிய முத்தி நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது. திருவாலீஸ்வரத்தில் காட்டப்பட்டுள்ள ஆனந்த தாண்டவ ஆடல் வல்லானின் சிற்பத்தில் இறைவன் விரிசடையராய், நெற்றிப் பட்டை அணிந்து, நெற்றியில் கண் விளங்க, நெற்றிப்பட்டை அழகு செய்ய, காதுகளில் பத்ரகுண்டலமும், வியாழ குண்டலமும் அணி செய்ய விளங்குகிறார். பின்னிரு கைகளில உடுக்கையும், தீயகலும் கொண்ட ஆடல்வல்லார் வலது முன் கையில் அபய முத்திரை காட்டுகிறார். இடது முன் கை சிதைந்துள்ளது. அரையாடையின் இடைக்கட்டு முடிச்சு இடது புறம் ஆடலுக்கேற்றவாறு பறக்கிறது. இடது காலை கீழே குப்புற விழுந்துள்ள முயலகன் மீது ஊன்றி, வலது காலை குஞ்சித பாதமாக உயர்த்தியுள்ளார். மார்பில் முப்புரி நூல், வயிற்றில உதரபந்தம், கைகளில் மூன்று முன்வளைகள், இலைக் கருக்குடன் கூடிய தோள்வளைகள், கால்களில் அரியகம், பாதங்களில் சதங்கை ஆகியன அணி செய்கின்றன. சோழர் காலத்தில் மிகவும் சிறப்புற்றிருந்த ஆடல்வல்லான் சிற்பம் திருக்கோழம்பியம் கோயிலில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.";}
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருக்கோழம்பம் என்னும் தலத்தில் அமைந்துள்ள இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் 35-ஆவது திருத்தலமாகும். அப்பரும், திருஞானசம்பந்தரும் இத்தலத்தைப் பாடிப் பரவியுள்ளனர். முற்காலச் சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த திருக்கோழம்பநாதர் கோயில் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி அவர்களால் கட்டப்பட்ட கலைக்கோயிலாகும். இங்குள்ள சிற்பங்களின் உருவமைதி மிகவும் எழில் வாய்ந்தவை. குறிப்பாக சோழர்கள் காலத்தில் மிகவும் புகழ் வாய்ந்த படிமங்களுள் ஒன்றான ஆடல்வல்லானின் சிற்பத்தை தென்புற பஞ்சரக் கோட்டத்தில் அமைப்பது பின்பற்றப்பட்டு வந்தது தெரிகிறது. முற்காலச் சோழர்களின் கற்றளிகளில் ஆடல்வல்லானின் ஆனந்த தாண்டவக் கோலத்தை கற்சிற்பமாகவும், செப்புத் திருமேனியாகவும் வடித்து தனித்துவம் நல்கியுள்ளனர். அவ்வாறே இக்கோயிலிலும் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
குறிப்புதவிகள்
ஆடல்வல்லான்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்