சிற்பம்

பிட்சாடனர்
சிற்பத்தின் பெயர் | பிட்சாடனர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில் |
ஊர் | திருக்கோழம்பம் |
வட்டம் | திருவிடைமருதூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில் அர்த்தமண்டப வடபுற பஞ்சரக் கோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / செம்பியன்மாதேவியார் |
விளக்கம்
a:1:{i:0;s:1105:"வட்டணை படவந்த நாதராக பிச்சதேவர், கனமான பாதுகைகளை கால்களில் அணிந்தவராய், நாற்கரங்களோடு, மானுக்கு உணவூட்டியபடி, இடையில் நாகத்தினை கச்சையாகக் கட்டிய திகம்பரராய், பின்புறம் விரிந்த சடையில் இடதுபுறம் மதியையும்,வலதுபுறம் அரவத்தையும், உச்சி முகப்பில் கபாலத்தினையும் கொண்ட முக்கண்ணராய், இடது நீள்செவியில் பத்ரகுண்டலம் விளங்கிட, கழுத்து, கைகளில் அணிகள் துலங்கிட, நக்கன் நனி நாகரிகத்தனாய் நடக்கின்ற நளினக்காட்சி.";}
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருக்கோழம்பம் என்னும் தலத்தில் அமைந்துள்ள இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் 35-ஆவது திருத்தலமாகும். அப்பரும், திருஞானசம்பந்தரும் இத்தலத்தைப் பாடிப் பரவியுள்ளனர். முற்காலச் சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த திருக்கோழம்பநாதர் கோயில் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி அவர்களால் கட்டப்பட்ட கலைக்கோயிலாகும். இங்குள்ள சிற்பங்களின் உருவமைதி மிகவும் எழில் வாய்ந்தவை. முற்கால சோழர் காலத்திய சிற்பங்களுள் நக்கர் எனப்படும் பிட்சாடனர் சிற்பம் சொல்லொண்ணா கலைநயத்துடன் சோழமாதேவியரால் வடிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. செம்பியன் மாதேவியார், உலோமாதேவியார், பஞ்சவன் மாதேவியார் ஆகிய சோழப் பேரரசியர் நக்கன் படிமத்திற்கு சிறப்பும், பேறும் அளித்து தாம் எடுப்பித்த கோயில்களில் தனிப்பெருங் கலைநயத்துடன் படைத்துள்ளனர். தாருகாவனத்தின் முனிபத்தினியரை வசீகரிக்கும் சிரிப்புடன் பவனி வந்த இந்த வட்டணை படவந்த நாதனின் எழில் இக்கோயில் சிற்பத்தில் தனித்துவமாக தெரிகிறது.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |