சிற்பம்

துர்க்கை

துர்க்கை
சிற்பத்தின் பெயர் துர்க்கை
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
வீரமங்கையாய் பதினாறு திருக்கைகளுடன் விளங்கும் சிம்மவாகினி துர்க்கை
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பதினாறு திருக்கைகளுடன் போருக்குப் புறப்படும் நிலையில் உள்ள தேவி பாய்ந்த நிலையில் உள்ள சிம்மத்தின் மேல் அமர்ந்துள்ளாள். இடது காலைத் தொங்கவிட்டு, வலது காலை மடித்து இடது தொடையின் மீது வைத்துள்ளாள். கரண்ட மகுடமணிந்து, நெற்றியில் கண்ணி மாலை சூடியுள்ள துர்க்கை தன் கரங்களில் வாள், கேடயம், அம்பு, வில், சங்கு, சக்கரம், சூலம் ஏந்தியுள்ளாள். வீரத்திருமகளான துர்க்கையின் முதுகில் அம்பறாத்தூணி காட்டப்பட்டுள்ளது. வலது முன் கைகளில் ஒன்று கடக முத்திரையிலும், மற்றொன்று மடக்கிய காலின் மீது வைத்தவாறும் உள்ளன. இடது பின் கை தொடையில் (ஊரு முத்திரை) வைக்கப்பட்டுள்ளது. அரையாடை அணிந்துள்ள அன்னையின் கால்களில் வீரக்கழல்கள் காட்டப்பட்டுள்ளன. காதுகளில் வளையங்கள் காட்டப்பட்டுள்ளன. மார்பு கச்சை அணிந்துள்ளார். கழுத்தில் கண்டிகையும், ஆரமும் அணிந்துள்ளார். பல்லவச்சிற்பியின் கைவண்ணத்தில் எழில் தவழும் முகத்தினைப் பெற்றுள்ள தேவி வீரநங்கையாக அமர்ந்துள்ளாள். தேவியின் தலைக்கு மேலே கொற்றக்குடை காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
துர்க்கை
சிற்பம்

துர்க்கை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்