சிற்பம்

அகத்தியர்
சிற்பத்தின் பெயர் | அகத்தியர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில் |
ஊர் | திருக்கோழம்பம் |
வட்டம் | திருவிடைமருதூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில் அர்த்தமண்டப தென்புற பஞ்சரக் கோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / செம்பியன்மாதேவியார் |
விளக்கம்
முற்காலச் சோழர்களின் கற்றளிகளில் கருவறைத் தென்திருச்சுற்றின் அர்த்தமண்டப புறக் கோட்டத்தில் தமிழ் முனிவராம் அகத்தியரின் அமர்ந்த கோல சிற்பம் அமைக்கப்படுவது மரபு. நெற்றிப்பட்டையுடன் கூடிய சடை பாரம் தலைக்கோலமாய் தரித்தவராய் தமிழ் முனிவர் வலது கையில் அக்கமாலையையும், இடது கையில் கெண்டியையும் பிடித்துள்ளார். முகத்தில் தொங்கும் மீசை மற்றும் மார்பில் விழும் பரந்த தாடியுடன் காணப்படும் அகத்தியர் கழுத்தில் நீண்ட உருத்திராக்க மாலையும், மார்பில் முப்புரிநூலும் அணிந்துள்ளார். பீடத்தின் மீது முனிவர் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு உருள் தாங்கியின் மீது வைத்தபடி சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். அன்னாரின் தலைக்கு மேல் குடை ஒன்று காட்டப்பட்டுள்ளது. முனிவர் அமர்ந்துள்ள கோட்டத்தின் இருபுறமும் இரு இளம் முனிவர்கள் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். அவர்களின் அமர்வுக் கோலம் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டுள்ளது. சீடர்களாய் இருக்கலாம்.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருக்கோழம்பம் என்னும் தலத்தில் அமைந்துள்ள இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் 35-ஆவது திருத்தலமாகும். அப்பரும், திருஞானசம்பந்தரும் இத்தலத்தைப் பாடிப் பரவியுள்ளனர். முற்காலச் சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த திருக்கோழம்பநாதர் கோயில் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி அவர்களால் கட்டப்பட்ட கலைக்கோயிலாகும். இங்குள்ள சிற்பங்களின் உருவமைதி மிகவும் எழில் வாய்ந்தவை. தமிழ் முனிவராம் அகத்தியரை குருவாக கொண்ட தமிழ் மன்னர்களில் பாண்டியர்களோடு சோழர்களும் குறிப்பிடத்தக்கவராவர். முற்காலச் சோழர்கள் தாம் எடுப்பித்த கற்றளிகளில் அகத்திய முனிவரின் அமர்வு கோல சிற்பத்தை கருவறை திருச்சுற்றின் தென்புற கோட்டத்தில் அமைத்துள்ளனர். இங்குள்ள அகத்தியர் சிற்பம் சோழர் கலைப்பாணியை காட்டி நிற்கிறது.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 21 |
பிடித்தவை | 0 |