வழிபாட்டுத் தலம்
காளியாபட்டி சிவன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | காளியாபட்டி சிவன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பராந்தக சோழன் கோயில் |
| ஊர் | காளியாபட்டி |
| வட்டம் | குன்னாண்டார் கோயில் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | சிவபெருமான் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தச் சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | கல்வெட்டுகள் உள்ளன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | நந்தி, சிவன், தட்சிணாமூர்த்தி போன்ற தனிச்சிற்பங்கள் உள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
|
சுருக்கம்
இக்கோயில் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழனால் எடுப்பிக்கப்பட்டதாகும். ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் சிதிலமடைந்துள்ளது. மகாமண்டபத்தின் தாங்குதளம் மட்டும் காணப்படுகின்றது. இதில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.
|
|
காளியாபட்டி சிவன் கோயில்
| கோயிலின் அமைப்பு | ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் சிதிலமடைந்துள்ளது. மகாமண்டபத்தின் தாங்குதளம் மட்டும் காணப்படுகின்றது. இதில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | நார்த்தாமலை, குன்னாண்டார் கோயில், விசலூர் கோயில் |
| செல்லும் வழி | மதுரையிலிருந்து 140 கி.மீ. தொலைவிலுள்ள புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் வழியாக குன்னாண்டார் கோயில் செல்லலாம். அங்கிருந்து விசலூர் வழியாக காளியாபட்டி சிவன் கோயில் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 42 |
| பிடித்தவை | 0 |