சிற்பம்
கங்காதரமூர்த்தி (கங்காதரர்)
கங்காதரமூர்த்தி (கங்காதரர்)
சிற்பத்தின் பெயர் | கங்காதரமூர்த்தி (கங்காதரர்) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
தன் புரிசடை ஒன்றில் கங்கையைத் தாங்கும் பெருமான் (கங்காதரர்)
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
விண்ணிலிருந்து பூமிக்கு பாய்ந்து வரும் கங்கையை தன் புரி சடை ஒன்றில் தாங்கும் கங்காதரர் இடது காலை ஊன்றி, வலது காலை உயர்த்தி பீடத்தில் நிறுத்தி நின்றுள்ளார். இது தூக்கிய முழங்கால் என்ற அமைப்பாகும். (ஊர்த்துவஜானு) எட்டுத் திருக்கைகளில் வலது முன்கை அபய முத்திரையிலும், நடுக்கை கடக முத்திரையிலும், வலது மேற்கை புரிசடையைப் பிடித்தவாறும் உள்ளன. இடது பின்கை ஊர்த்துவஜானு நாட்டிய முத்திரையிலும், இடது நடுக்கை தன் சடை முடியிலிருந்து ஒற்றைப் புரியை நீட்டி அதில் கங்கைப் பெண்ணை தாங்கியவாறும் அமைந்துள்ளன. ஜடாமகுடம் அணிந்துள்ள இறைவன் வலதுபுறம் தலையைச் சாய்த்துள்ளார். நீள்காதுகளில் அணிகலன்கள் அணிந்துள்ளார். அரையாடை அணிந்துள்ள இறைவனின் அணிகலன்களாக கழுத்தில் கண்டிகை, தோள்மாலை, தோள்வளை, கடகவளை, முன்வளை ஆகியனவும் காட்டப்பட்டுள்ளன. அருகில் நிற்கும் உமையாள் ஒயிலாக சாய்ந்த நிலையில் இக்காட்சியை பார்வையிட்டவாறு இடது காலை ஊன்றி, வலது முழங்காலை வளைத்தும் நிற்கிறார். வலது கையை பீடத்தில் ஊன்றியுள்ளார். தேவியின் ஆடையணிகலன்கள் சிதைவுற்றுள்ளன. கங்காதரரின் இடது மேற்புறம் பாய்ந்து வரும் கங்கை பெண் வடிவில் காட்டப்பட்டுள்ளாள். கங்காதரரின் காலின் கீழே இரண்டு கணங்கள் ஆடிய நிலையில் உள்ளன. கங்காதரரின் இச்சிற்பம் ஆடல் கோலத்தில் காட்டப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கங்காதரமூர்த்தி (கங்காதரர்)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |