சிற்பம்

இராம-இலக்குவன் மற்றும் அனுமன்
சிற்பத்தின் பெயர் | இராம-இலக்குவன் மற்றும் அனுமன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
சொல்லின் செல்வன் அனுமனுடன் உரையாடும் இராமரும், பின்னால் வணங்கி நிற்கும் இலக்குவனும்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இச்சிற்பம் முப்பரிமாணத்தில் அமைக்கப்பட்டதாகும். பாறையின் மீது அமர்ந்துள்ள இராமன் தன் இடது பின்புறமிருந்து பணிவுடன் விடயம் கூறும் அனுமனுக்காக தலையைத் திருப்பியுள்ளார். இலக்குவன் இராமனின் பின்னே கைகளைக் கூப்பி வணங்கியபடி நின்றுள்ளார். இலக்குவன் வில்லினை தமது இடது தோளில் கொண்டுள்ளார். அம்பறாத்தூணி வலது புறம் முதுகின் பின்னே காடடப்பட்டுள்ளது. தமையர்கள் இருவரும் கிரீடமகுடம் தரித்து, முத்தாலான அணிகலன்களை அணிந்துள்ளனர். கணுக்கால் வரையிலான நீண்ட ஆடையை உடுத்தியுள்ளனர். அனுமன் செவிகளில் சங்கக் குழைகளும், இடையில் அரையாடையும், கால்களில் பாதகடகமும் அணிந்து காணப்படுகிறார். இவர்களுக்கு கீழே ஒரு அடியவர் அமர்ந்துள்ளார். அவர் இராமனை நோக்கி கைகளைக் குவித்துள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |