சிற்பம்

பாசுபதமூர்த்தி

பாசுபதமூர்த்தி
சிற்பத்தின் பெயர் பாசுபதமூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
அருச்சுனனுக்கு பாசுபதம் அளிக்குமுன் அவனை சோதித்தறிய அவனோடு கிரதார்ச்சுனராய் சண்டையிடும் பாசுபதமூர்த்தி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
அருச்சுனனும் வேடராய் வந்துள்ள சிவபெருமானும் வலமாகவும், இடமாகவும் ஊர்த்துவஜானுவில் கால்களை வைத்துக் கொண்டு பன்றியைக் கொல்ல அம்பெய்தும் காட்சி. கிராதார்ச்சுனரின் பின்புறம் வராகம் காட்டப்பட்டுள்ளது. இருவரும் அரையாடை அணிந்து இளம் வீரர்களாய் காட்சியளிக்கின்றனர். சிவனார் ஜடாமகுடம் அணிந்துள்ளார். தலைக்குப் பின்னே அவருக்கு ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. அருச்சுனன் உச்சிக்கொண்டை அணிந்துள்ளான். அருச்சுனனுக்கு மார்பின் குறுக்கே சன்னவீரம் செல்கிறது. இறைவன் கழுத்தில் கண்டிகை அணிந்துள்ளார். பக்தனோ சவடி அணிந்துள்ளான். இருவரும் கடகவளை, முன்வளைகள் அணிந்து, காதுகளில் வேறுபட்ட அணிகலன்களோடு திகழ்கின்றனர். இருவரும் முதுகுப்புறம் வாள்களைச் செருகியுள்ளனர். இடது கையில் வில்லை வைத்துள்ளனர். சிவனார் வில்லில் அம்பைப் பூட்டி எய்தும் நிலையில் உள்ளார். அருச்சுனனோ அதன் முதுகில் கட்டியுள்ள அம்பறாத்தூணியில் உள்ள அம்பை எடுக்க முனைகிறான். இதிலிருந்தே சிவனார் அருச்சுனனை விட விரைவாக அம்பெய்து வராகத்தை வதைத்துவிட்டார் என்பது புலப்படுகிறது.
குறிப்புதவிகள்
பாசுபதமூர்த்தி
சிற்பம்

பாசுபதமூர்த்தி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்