சிற்பம்
காமதகனமூர்த்தி
காமதகனமூர்த்தி
சிற்பத்தின் பெயர் | காமதகனமூர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | திருவாலீஸ்வரம் |
வட்டம் | அம்பாசமுத்திரம் |
மாவட்டம் | திருநெல்வேலி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
விளக்கம்
மலர்க்கணை விடுத்த காமனை கண்ணால் எரித்த காமதகன மூர்த்தி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
குமார சம்பவம் நிகழ்வதற்காக ஈசனின் மேல் தன் மலர்க்கணைகளை எய்த மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்து சாம்பலாக்கினார் ஈசன். அந்த ஈசனே காமதகனமூர்த்தி. பின் மன்மதனின் துணைவியாகிய இரதியின் வேண்டுகோளுக்கிரங்கி மதனை உயிர்ப்பிக்கிறார். ஆனால் இரதி கண்களுக்கு மட்டும் அவன் தென்படுவான் என்றும், பிறர் கண்களுக்கு புலனாகான் என்றும் கூறுகிறார். காதல் இணைகளாகிய இரதியும் மதனும் சிவபெருமானை வணங்கி நிற்கின்றனர். இக்காட்சி திருவாலீஸ்வரர் கோயிலில் சிற்ப வடிவத்தில் அமைந்துள்ளது. இறைவன் ஜடாமகுடத்துடன் விளங்குகிறார். பீடத்தின் மீது அமர்ந்துள்ள யோகியான சிவபெருமான் வலது காலை தொங்கவிட்டு கீழே அமர்ந்துள்ள பூதத்தின் தோளில் வைத்துள்ளார். வலது காலை மடக்கி, பாதத்தை குஞ்சித பாதமாகக் கொண்டு பூதத்தின் தலையின் மீது வைத்துள்ளார். நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் மானையும் மழுவையும் பற்றியுள்ளார். முன் வலது கை சின் முத்திரை காட்டுகிறது. இடது முன் கையில் சுவடி உள்ளது.கழுத்தில் கண்டிகையும், சரப்பளியும், வயிற்றில் உதரபந்தமும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் தோள்வளை, முன் வளைகளும், கால்களில் அரியகமும், இடையில் இடைக்கட்டுடன் கூடிய அரையாடையும் இறைவனின் ஆடையணிகளாக உள்ளன. சிவனாரின் இடது புறத்தில் இரதி இரு கைகளை கூப்பி வணங்கிய நிலையில் உள்ளாள். இரதியின் பின்புறம் அவள் தோளை தொட்டவாறு நிற்கும் மாரன் தான் செய்த செயலுக்கு வருந்துபவனாக அப்பாவியாக முகத்தை வைத்துள்ளான். இக்காட்சி மிகவும் தத்ரூபமாக சிற்பியால் வடிக்கபட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
காமதகனமூர்த்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |