
திருநாவுக்கரசர்
சிற்பத்தின் பெயர் | திருநாவுக்கரசர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | வேளாங்கன்னி |
வட்டம் | கீவாளூர் |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 57 செ.மீ. |
விளக்கம்
அடியாருள் எளியரான அருந்தவத் தத்துவத்துள் உயரியரான உழவாரப்பணியை உளமேற்கொண்டு உயர்தனித் தொண்டராம் திருநாவுக்கரசரின் இப்படிமம் சோழர்கலைக்கு சான்றாய் விளங்குகின்றது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தேவார மூவருள் ஒருவரான திருநாவுக்கரசர் தனது பதிகங்களில் சைவத் தத்துவங்களை பதிவு செய்தவர். உழவாரப் பணி என்னும் திருக்கோயில் திருத்தொண்டினை தொடங்கி வைத்தவர். எனவே உழவாரப்படை என்னும் கருவியை எப்போதும் தன் தோள் மீது சார்த்தி வைத்திருப்பவராய் காணப்படுகிறார். அரையாடை இடையுடுத்திய எளியராய், உருத்திராக்க மாலையை தலையிலும், தோளிலும், கழுத்திலும் அணிந்து சைவ அடியாராக காணப்படுகிறார். |
|
ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Sep 2018 |
பார்வைகள் | 18 |
பிடித்தவை | 0 |