திரிபுராந்தகர்
| சிற்பத்தின் பெயர் | திரிபுராந்தகர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | திருவாலங்காடு |
| வட்டம் | திருத்தணி |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| அளவுகள் / எடை | உயரம் 81 செ.மீ. |
|
விளக்கம்
திரிபுராந்தகர் ஆலிடாசனத்தில் நான்கு திருக்கைகளுடன் நின்றுள்ளார். முன்னிருகைகளில் வில்லும் அம்பும் காட்டப்பட்டுள்ளன. அமைதி தவழும் வட்ட வடிவ முகத்துடன் விளங்கும் முப்புரிமெரித்தவரின் மார்பில் முப்புரிநூல் துலங்குகின்றது. உதரபந்தம் வயிற்றில் விளங்குகின்றது. மூன்றடுக்கு கழுத்தணியும் காட்டப்பட்டுள்ளன. பெருவீரரின் திண் தொடைகளை இறுகப் பற்றிய அரையாடையை இறுக்கிய கீர்த்தி முகத்துடன் கூடிய இடைவார் அழகுடையதாக திகழ்கின்றது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மூவெயில் எறிந்த பிரான் நான்கு திருக்கைகளில் கீழிரு கைகளில் வில், அம்பையும் பிடித்துள்ளார். கேச மகுடம் விளங்கிடும் தலைக்கோலம் கொண்டுள்ளார். |
|
|
குறிப்புதவிகள்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
| பார்வைகள் | 43 |
| பிடித்தவை | 0 |