சிற்பம்
சிவகாமி
சிற்பத்தின் பெயர் சிவகாமி
சிற்பத்தின்அமைவிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
ஊர் குலசேகரநல்லூர்
வட்டம் திருப்பனந்தாள்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் அரசு மைய அருங்காட்சியகம், சென்னை
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் உலோகம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர்
விளக்கம்

          ஆடல்வல்லானின் உடனுறை தேவியாக விளங்குபவள் சிவகாமி. தாமரைப் பீடத்தின் மீது திரிபங்க நிலையில் நின்றுள்ளார். முகப்புடன் கூடிய கரண்ட மகுடம் தலையை அணி செய்ய, புன்னகை தவழும் எழில் வதனம் கொண்டவளாய், வலது கை கடக முத்திரை காட்டிட, இடது கையை தொங்க விட்டவாறு, மடிப்புடன் கூடிய முழு நீள ஆடை அணிந்தவாறும், அனைத்துவித அணிகளைக் கொண்டவாறு காட்டப்பட்டுள்ளாள்.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

         சிவபெருமானின் பல்வேறு வடிவங்களுள் நடராஜர் என்னும் ஆடல்வல்லான் வடிவம் சிறப்பு வாய்ந்தது. ஆடல்வல்லானின் ஆனந்த தாண்டவத்தை கண்டு களிகூரும் பாவனையில் உடனுறையாக நிற்பவள் சிவகாமி.

ஆவண இருப்பிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
சிவகாமி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Sep 2018
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்