சிற்பம்
சங்கர நாராயணன்
சங்கர நாராயணன்
சிற்பத்தின் பெயர் | சங்கர நாராயணன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
திருமாலும் சிவனும் நிற்கும் காட்சி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. பிற்காலங்களில் ஹரியும் சிவனும் இணைந்த உருவம் சிற்பங்களில் காட்டப்படுகிறது. சிவ வடிவங்களில் ஒன்றாக சங்கர நாராயணன் உருவம் கருதப்படுகிறது. வைகுண்டப் பெருமாள் கோயிலில் காணப்படும் சிற்பம் விஷ்ணுவும் சிவனும் நிற்பதைப் போல் காட்டுகிறது. விஷ்ணு கைகளில் பிரயோகச் சக்கரம், சங்கு வைத்துள்ளார். அருகில் நிற்பவர் ஜடாபாரம் கொண்டுள்ளார். அரையாடை அணிந்துள்ளார். மேலும் அவரின் காலடியில் குள்ள பூத கணம் ஒன்று நிற்கிறது. இத்தகைய காட்சிகளைக் கொண்டுதான் விஷ்ணுவின் அருகில் நிற்பவர் சிவன் என்று அறியமுடிகிறது. ஏனெனில் சிவனது கைகளில் அவருக்குரிய ஆயுதங்கள் ஏதுமில்லை. விஷ்ணு வலது முன் கையை இடையில் கடி முத்திரையாகவும், இடது முன் கையை கடக முத்திரையாகவும் கொண்டுள்ளார். சிவனாருக்கு இடது கைகள் மட்டுமே தெரிகின்றன. இடது பின் கையை இடையில் கடி முத்திரையாகவும், இடது முன் கையை கடக முத்திரையாகவும் கொண்டுள்ளார். திருமால் கணுக்கால் வரை ஆடையணிந்துள்ளார். இடைக்கட்டு ஆடையின் முடிச்சு வலப்புறத்திலிருந்து கணுக்கால் வரை நீண்டு தொங்குகிறது. அரையாடை அணிந்த சிவனாருக்கு இடைக்கட்டு தோடைகளின் முன்னே விழுந்துள்ளது. இருவரும் மார்பில் முப்புரி நூலும், வயிற்றில் உதரபந்தமும் அணிந்துள்ளனர். இருவருக்கும் நீள்காதுகள் தோள் வரை நீண்டு தொங்குகின்றன. ஆத்மார்த்த நண்பர்களாய் இருவரும் அருகருகே நிற்கின்றனர். மேலே இருவர் பறந்த நிலையில் வாழ்த்தொலிக்கின்றனர்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சங்கர நாராயணன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |