சிற்பம்
பல்லவ அரசன்
பல்லவ அரசன்
சிற்பத்தின் பெயர் | பல்லவ அரசன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | அரச உருவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
அரசன் அமர்ந்திருக்கும் காட்சி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பல்லவ மன்னன் அவையில் சுகாசனத்தில் வீற்றிருக்கிறான். இடது கையை இடது தொடையில் வைத்தும், வலது கையை கடக முத்திரையிலும் (நண்டு பிடி) கொண்டுள்ளான். நெற்றியில் கண்ணி மாலை திகழ்கிறது. நீள்காதுகளில் குண்டலங்கள் விளங்குகின்றன. கழுத்தில் சரப்பளியும், சவடியும் உள்ளன. மார்பில் யக்ஞோபவீதம் (முப்புரிநூல்) செல்கிறது. மன்னன் கொற்றக்குடையின் கீழ் அமர்ந்துள்ளான். மன்னனின் மேற்புறம் இருவர் வணங்கிய நிலையில் நிற்கின்றனர். யானைப்படை வீரர்களும், குதிரைப்படை வீரர்களும் வலது கையை உயர்த்தி வேல் எறியும் காட்சி அருகில் காட்டப்பட்டுள்ளது. போர் முரசொலிக்கும் ஒருவனும் காட்டப்பட்டுள்ளான். இப்போர்க் காட்சி பல்லவர் காலத்தில் நிகழ்ந்த ஒரு போரினைப் படம் பிடிக்கிறது. இச்சிற்பத் தொகுதியில் காட்டப்படும் அமர்வு நிலை, ஆடையணிகள் ஆகியவற்றைக் காணும் பொழுது பல்லவர் கால சமூகப் பண்பாடு, மரபு நிலை, கலாச்சாரம், அரசியல், போர்முறை ஆகியன நன்கு விளங்குகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
பல்லவ அரசன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |