சிற்பம்
பல்லவ அரசன்
பல்லவ அரசன்
சிற்பத்தின் பெயர் | பல்லவ அரசன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | அரச உருவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
பல்லவ அரசனின் பட்டாபிஷேக நிகழ்வு
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பல்லவ மன்னனாய் புதிதாய் ஆட்சிப் பொறுப்பேற்கும் இளவலுக்கு பட்டாபிஷேகம் செய்யும் சிற்பக் காட்சி. வைகுந்தப் பெருமாள் கோயிலின் திருச்சுற்று மாளிகையில் அமைந்துள்ள பல்லவர்களின் குலமரபுப் பட்டியல் சிற்ப வரிசையில் பட்டாபிஷேக சிற்பங்களே அதிகம் காணப்படுகின்றன. இச்சிற்பத் தொகுதியில் மகுடம் சூடவிருக்கும் மன்னன் அரியணையில் அமர்ந்துள்ளான். இரு கால்களையும் தொங்கவிட்டவாறும், இரு கைகளையும் இரு தொடையில வைத்தவாறும் வீரமாய் அமர்ந்துள்ள பல்லவ குல திலகத்திற்கு தலைக்கு மேலே இரு வேதியர்கள் புனித நீரை ஊற்றுகின்றனர். மன்னன் நெற்றியில் கண்ணி மாலை அணிந்து மகுடம் தரித்துள்ளான். நீள்காதுகளில் குண்டலங்கள் அணிந்துள்ளான். கழுத்தில் கண்டிகையும் சரப்பளியும், மார்பில் சன்னவீரமும் அணி செய்கின்றன. தோள்மாலை தோளிலும், தோள்வளை, முன் வளை ஆகியன கைகளிலும் மிளிர்கின்றன. ஆடையின் இடைக்கட்டு முன்னோக்கி விழுந்துள்ளது. இக்காட்சியின் அருகில் குடை வைத்தவாறு ஒருவர் நின்றுள்ளார். இவர் பல்லவர் காலத்தில் சீனாவிலிருந்து காஞ்சிக்கு வருகை புரிந்த சீனப்பயணி யுவான்சுவாங் என்பவராய் இருக்கலாம். இச்சிற்பத் தொகுதியில் காட்டப்படும் அமர்வு நிலை, ஆடையணிகள் ஆகியவற்றைக் காணும் பொழுது பல்லவர் கால சமூகப் பண்பாடு நன்கு விளங்குகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
பல்லவ அரசன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |