சிற்பம்

பல்லவ அரசன்

பல்லவ அரசன்
சிற்பத்தின் பெயர் பல்லவ அரசன்
சிற்பத்தின்அமைவிடம் வைகுண்டப் பெருமாள் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை அரச உருவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்
விளக்கம்
அரசன் அமர்ந்திருக்கும் காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பல்லவ மன்னன் அவையில் சுகாசனத்தில் வீற்றிருக்கிறான். வலது கையை வலது தொடையில் வைத்தும், இடது கையை வரத முத்திரையிலும் கொண்டுள்ளான். தலையில் கிரீட மகுடம் அணிந்துள்ளான். நெற்றியில் கண்ணி மாலை திகழ்கிறது. நீள்காதுகளில் குண்டலங்கள் விளங்குகின்றன. தோள்மாலை, தோள்வளை, முன்வளை ஆகியன அணி செய்கின்றன. கழுத்தில் சரப்பளியும், கண்டிகையும் உள்ளன. மார்பில் யக்ஞோபவீதம் (முப்புரிநூல்) செல்கிறது. மன்னனின் மேற்புறம் இருவர் சாமரத்தை இரு கைகளில் பிடித்து தோளில் சாய்த்தபடி நிற்கின்றனர். அரசன் அமர்ந்திருக்கும் பீடத்தின் அருகே பக்கத்திற்கொருவராக இருவர் அமர்ந்திருக்கின்றனர். வலதுபுறம் உள்ளவர் சற்று முதியவராக தாடி மீசையுடனும், இடது புறம் அமர்ந்திருப்பவர் இளையவராகவும் காணப்படுகின்றனர். இருவரும் ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளனர். இருவரும் கைகளை விளக்கம் கூறும் பாவனையில் வைத்துள்ளனர். இக்காட்சி அரசனின் ஆலோசனையை குறிப்பிடுகிறது. இச்சிற்பத் தொகுதியில் காட்டப்படும் அமர்வு நிலை, ஆடையணிகள் ஆகியவற்றைக் காணும் பொழுது பல்லவர் கால சமூகப் பண்பாடு நன்கு விளங்குகிறது.
குறிப்புதவிகள்
பல்லவ அரசன்
சிற்பம்

பல்லவ அரசன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்