சிற்பம்
பல்லவ அரசன்
பல்லவ அரசன்
சிற்பத்தின் பெயர் | பல்லவ அரசன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | அரச உருவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
பல்லவ அரசன் தன் தேவியுடன் அமர்ந்திருக்கும் காட்சி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பல்லவ அரசன் இடது காலைத் தொங்கவிட்டு, வலது காலை மடித்து சுகாசனத்தில் அமர்ந்துள்ளான். இடது கையை யோக முத்திரையாய் மடியில் வைத்தும், வலது கையை அபய முத்திரை காட்டியும் உள்ளான். தலையில் கிரீடம் அலங்கரிக்கிறது. நெற்றியில் கண்ணி மாலை திகழ்கிறது. நீள்காதுகளில் குண்டலங்கள் விளங்குகின்றன. மார்பில் யக்ஞோபவீதம் (முப்புரிநூல்) செல்கிறது. அரசனின் அருகில் அவன் தேவி அமர்ந்துள்ளாள். சோமாஸ்கந்தர் சிற்பத் தொகுதியில் உமையின் அமர்வு போன்று அமர்ந்துள்ள தேவியின் தலையலங்காரமும் தலைவனைப் போலவே அமைந்துள்ளது. இடது கையை தாங்கியில் ஊன்றியுள்ளாள். வலது கை கடக முத்திரை காட்டுகிறது. அரசன் அரசியின் பின்னால் இரு சாமர வீரர்கள் உள்ளனர். வலது புறமிருப்பவர் வலது கையில் சாமரத்தையும், இடது கையில் கடக முத்திரையும் கொண்டுள்ளார். இடது புறமிருப்பவர் இடது தோளில் சாமரத்தைக் கொண்டும், வலது கையை உயர்த்தியும் உள்ளார். மன்னரின் கீழே இருவர் ஒருவர் பின்னால் ஒருவராக அமர்ந்துள்ளனர். இவர்களுக்குப் பின்னால் ஒருவர் நிற்கிறார். பல்லவர்களின் அவைக்காட்சி பெரும்பாலும் இவ்வாறே பல சிற்பங்களில இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சிற்பத் தொகுதியில் காட்டப்படும் அமர்வு நிலை, ஆடையணிகள் ஆகியவற்றைக் காணும் பொழுது பல்லவர் கால சமூகப் பண்பாடு நன்கு விளங்குகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
பல்லவ அரசன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 27 |
பிடித்தவை | 0 |