சிற்பம்
விஷ்ணு
விஷ்ணு
சிற்பத்தின் பெயர் | விஷ்ணு |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
பெருமாள் நின்ற கோலம்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பீடத்தின் மீது சமபாதத்தில் நேராக நின்றிருக்கும் திருமால் நீண்ட அலங்கரிக்கப்பட்ட கிரீடமகுடம் தரித்துள்ளார். நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் பிரயோகச் சக்கரமும், சங்கும் கொண்டுள்ளார். முன் வலது கை அபய முத்திரையாகவும், இடது கை இடையில் வைத்தவாறு கடி முத்திரையாகவும் அமைந்துள்ளன. மார்பில் முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம், கைகளில் தோள்வளை, முன் வளைகள், கணுக்கால் வரை நீண்டு தொங்கும் பட்டாடை ஆகியன அணிந்துள்ளார். இடையில் இடைவார்ப் பட்டையுடன் கூடிய இடைக்கட்டும், தொடை வரை நீண்டு தொங்கும் குறங்குச் செறி என்னும் இடையணியும், காதுகளில் மகரக் குண்டலங்களும் அணிந்து சாந்த சொரூபியாய் திகழ்கிறார். பெருமாளின் காலடியில் கருடன் கருடாசனத்தில் இரு கைகளை கூப்பி வணங்குகிறார். கருடன் கிரீடமகுடம் தலையிலும், அரையாடை இடையிலும், சரப்பளி கழுத்திலும் அணிந்துள்ளார். முகம் சிதைந்துள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
விஷ்ணு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |