Back
வழிபாட்டுத் தலம்
பனஞ்சாடி திருநீலகண்டர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் பனஞ்சாடி திருநீலகண்டர் கோயில்
வேறு பெயர்கள் திருநீலகண்டர் கோயில்
ஊர் பனஞ்சாடி
வட்டம் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
உட்பிரிவு 1
மூலவர் பெயர் திருநீலகண்டர்
காலம் / ஆட்சியாளர் கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு கல்வெட்டுகள் இல்லை.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் உள்ள யானைவரியும், பூமிதேசத்தில் உள்ள யாளிவரியும் குறிப்பிடத்தக்கவை. விமானத்தின் கழுத்துப்பகுதியில் நான்முகன், யோக நரசிம்மன், ஆலமர்ச்செல்வன் போன்ற கற்சிலைகள் இருந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக பல கல் நந்திகள் உள்ளன.
தலத்தின் சிறப்பு 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் காட்டுகின்றது.
சுருக்கம்
பனஞ்சாடி என்னும் ஊரின் மொட்டையாண்டவர் குளத்தின் கிழக்குக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் “மொட்டையாண்டவர் கோயில்“ என்றும், “திருநீலகண்டர் கோயில்“ என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. இது முற்காலப் பாண்டியர் கட்டடடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோயிலின் அடிப்பகுதி முதல் கூரைப்பகுதி வரை கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையாலான விமானம் அமைந்துள்ளது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை மட்டும் கொண்டதாக தற்போது விளங்குகிறது. எளிய அமைப்புடைய இக்கோயில் கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம்பெறவில்லை. கோட்டங்களில் தெய்வங்களை அமைக்காதிருப்பது பாண்டியர்களின் கலைப்பாணியாகும். கருவறை சதுர வடிவமுடையது. தாங்குதளத்தில் யானைவரி செல்கிறது. எனவே பிரதிபந்த அதிட்டானமாக திகழ்கிறது. கருவறை விமானம் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் உள்ளன. முழுவதும் சிதிலமடைந்த இக்கோயில் பழமைத் தன்மையாக அதன் எச்சங்களைக் காட்டி நிற்கிறது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் உள்ள யானைவரியும், பூமிதேசத்தில் உள்ள யாளிவரியும் குறிப்பிடத்தக்கவை. விமானத்தின் கழுத்துப்பகுதியில் நான்முகன், யோக நரசிம்மன், ஆலமர்ச்செல்வன் போன்ற கற்சிலைகள் இருந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக பல கல் நந்திகள் உள்ளன.
பனஞ்சாடி திருநீலகண்டர் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை மட்டும் கொண்டதாக தற்போது விளங்குகிறது. எளிய அமைப்புடைய இக்கோயில் கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம்பெறவில்லை. கோட்டங்களில் தெய்வங்களை அமைக்காதிருப்பது பாண்டியர்களின் கலைப்பாணியாகும். கருவறை சதுர வடிவமுடையது. தாங்குதளத்தில் யானைவரி செல்கிறது. எனவே பிரதிபந்த அதிட்டானமாக திகழ்கிறது. கருவறை விமானம் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் உள்ளன. முழுவதும் சிதிலமடைந்த இக்கோயில் பழமைத் தன்மையாக அதன் எச்சங்களைக் காட்டி நிற்கிறது.
பாதுகாக்கும் நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் அம்பாசமுத்திரம் கோயில்கள், தென்காசி சிவன் கோயில்
செல்லும் வழி அம்பாசமுத்திரம்- தென்காசி சாலையில் பனஞ்சாடி என்னும் ஊர் அமைந்துள்ளது. தென்காசியிலிருந்தும், அம்பாசமுத்திரத்திலிருந்தும் பனஞ்சாடி செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
பனஞ்சாடி திருநீலகண்டர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் தென்காசி, அம்பாசமுத்திரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் தென்காசி
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி தென்காசி விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 44
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்