மாங்குடி பிள்ளையார் குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | மாங்குடி பிள்ளையார் குடைவரை |
|---|---|
| அமைவிடம் | மாங்குடி |
| ஊர் | மாங்குடி |
| வட்டம் | அன்னவாசல் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
புதுக்கோட்டை, மாங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிறு பாறைக்குன்றின் தொடரில் அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயிலானது முற்றுப் பெறாத குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. இக்குடைவரையின் சிறிய கருவறையில் பிள்ளையார் புடைப்புச் சிற்பம் காணப்படுகின்றது. இக்குடைவரை முற்காலப் பாண்டியரது காலமாய் இருக்கலாம். |
|
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | சித்தன்னவாசல், நார்த்தாமலை, புதுக்கோட்டை அருங்காட்சியகம், புதுக்கோட்டை அரண்மனை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | திரு.சுப.முத்தழகன் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
புதுக்கோட்டையில் மாங்குடி என்னும் சிற்றூரில் உள்ள சிறுகுன்றில் குடையப்பட்ட குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியர் காலத்தியதாய் இருக்கலாம். இச்சிறுகுடைவரை சிறு கருவறை, முகமண்டபம் கொண்டதாய் காட்சியளிக்கிறது. கருவறையில் தாய்ப்பாறையிலேயே பிள்ளையார் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வூரைச் சேர்ந்த நிலக்கிழார் ஒருவரால் இப்பணி நிறைவேற்றப்பட்டிருக்கலாம். |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
8 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 14 Feb 2019 |
| பார்வைகள் | 88 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |