அப்துல்லாபுரம் அன்னச்சத்திரம்
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | அப்துல்லாபுரம் அன்னச்சத்திரம் |
|---|---|
| அமைவிடம் | அப்துல்லாபுரம் |
| ஊர் | அப்துல்லாபுரம் |
| வட்டம் | வேலூர் |
| மாவட்டம் | வேலூர் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.1789 |
|
விளக்கம்
பண்டையக் காலத்தில் புனித யாத்திரை செல்பவர்களுக்கும், நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும் அன்னம் அளித்தால் புண்ணியம் என்று உருவானது அன்ன சாத்திரங்கள். பயணிகள் பயணக் களைப்பை நீக்குவதற்கும், பசியாறி செல்வதற்கும் தானமாக அளிக்கபட்ட வேலூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அப்துல்லாபுரம் அன்னசத்திரம் தற்போது இடியும் நிலையில் புதர் மண்டி கிடக்கிறது. சத்திரத்தின் பின்புறம் ஒரு சிவலிங்கம், மற்றும் 8 அடி உயர கல்வெட்டு இதன் சரித்திரத்தை கூறுகின்றது. கல்வெட்டும், அதன் பொருளும் பின்வருமாறு. ஸ்ரீ ராமஜெயம் விஜேயாப்துதி சாலிவாகண சக வருஷம் 1789ல், கலியுக வருஷம் 4969 ல் பிறபவாதி சென்ற வருஷம் 60 இதில் வர்த்தமான பிரபவ வருடம் வைகாசி மாசம் 29ல் காஞ்சி மண்டலத்தில் உள்ள விரிஞ்சிபுரம் க்ஷேத்திரம் அருகே சன்னதி அக்கிரகாரத்தில் சாண்டில்ய மகரிஷி கோத்திரத்தை சேர்ந்த அக்கிரவாசிகளான சங்கரநாராயண தீக்ஷ்தரின் மகனும் சுப்பிரமணிய தீக்ஷ்தரின் பெளத்திரனுமாகிய சங்கர தீக்ஷ்தரின் மகன் வித்யாபதி தீக்ஷ்தர்......வேலூரில் சோதிநகரத்தில் உள்ள முத்து செட்டியாரின் மகனும் மாறப்ப செட்டியாரின் பெளத்திரனுமான முத்தைய்யா செட்டியாரின் மகன் தாண்டவராய செட்டியார் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள மேலது தேதி அன்று முத்தைய்யா செட்டியாரின் அண்ணன் பொன்னப்ப செட்டியார் முன்னது ஆண்டு (ஆங்கிரச வருஷம்??) கட்டிய சத்திரம் நந்தவனம் இவை அவரின் இளைய சகோதரர் முத்துசாமி செட்டியார் ருத்தோத்காரி வருடம் பிரதிஷ்டை செய்து சோமயாகம் செய்து சோமபானம் அபித்தலை தானம் கொடுத்து மேல் கண்ட.... செய்வித்து அதற்கு தேவைப்பட்ட திரவியங்கள் கொடுத்து பிராமண சந்தறப்பணை** முதலான விஷயங்களுக்கு பிரமாணர்களால் சோமயாகம் பூரணம் செய்து இந்த வகையில் அவர்களுக்கு தாம்பூலம் தக்ஷ்ணை தானம் எல்லாம் கொடுத்து பூரணமாக நடத்தி வைக்கப்பட்டது பிரபவ வருஷம் வைகாசி மாசம் 29 தேதி. |
|
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | வேலூர் அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவர் கோயில் |
| ஒளிப்படம்எடுத்தவர் | கோ.சசிகலா |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | கோ.சசிகலா |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
வேலூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அப்துல்லாபுரம் அன்னசத்திரம் தற்போது இடியும் நிலையில் புதர்மண்டி கிடக்கிறது. சத்திரத்தின் பின்புறம் ஒரு சிவலிங்கம், மற்றும் 8 அடி உயர கல்வெட்டு இதன் வரலாற்றைக் கூறுகின்றது. பொன்னப்பச் செட்டியார் கி.பி.1789-இல் இச்சத்திரத்தை கட்டியதாகவும், இவர் தம் உறவினர்கள் நந்தவனம் ஆகியவற்றை அமைத்த செய்தியையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
8 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 01 Feb 2019 |
| பார்வைகள் | 149 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |