வரலாற்றுச் சின்னம்
ஆனைமலை சமணக்குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் ஆனைமலை சமணக்குடைவரை
அமைவிடம் ஆனைமலை அடிவாரம்
ஊர் ஆனைமலை
வட்டம் மதுரை கிழக்கு வட்டம்
மாவட்டம் மதுரை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
ஆனைமலையில் உள்ள குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள கல்வெட்டில், "இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்" என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. குன்றம் என்றால் மலை. இதில் "இவ குன்றம்" என்றால் ஆனைமலை என்று பொருள்படுகிறது. பா என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் "தங்குவதற்கான கற்படுக்கை" என பொருள்படுகிறது. ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டக்காயிபன் என்று சொல்லக்கூடிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. ஆனைமலையில் அமைந்துள்ள சமணர்கள் வாழ்ந்த குகையின் நெற்றிப்பகுதியில் 9 புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமணதீர்தங்கரர் மகாவீரர், பார்தவநாதர், பாகுபலி, இயக்கி அம்பிகா, தாமரை மலர்கள் ஆகிய சிற்பங்கள் இன்றும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. மாமல்லபுரம் குடைவரை கோயில் போல இங்கு நரசிங்க பெருமாளுக்கும், முருகனுக்கும் கோயில்கள் உள்ளன.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் ஆனைமலை நரசிங்கப் பெருமாள் கோயில், இலாடன் கோயில், ஆனைமலை பிராமிக் கல்வெட்டு
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
ஆனைமலையின் மேற்குச் சரிவில் நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு அருகில் மலையின் நடுப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் சமணர் படுக்கையும் வட்டெழுத்து, கிரந்தம், தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா, இயக்கி ஆகியோர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சிற்பங்களும் சமணர்பள்ளியும் அச்சணந்தி என்ற சமணத் துறவியின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் மீது சுதை பூசி வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. தீர்த்தங்கரரின் அருகில் கைவேலைப்பாடமைந்த ஒரு குத்து விளக்கும், இருமருங்கும் தாமரைகளும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை பாண்டியர் காலத்தில் சமணர் இருக்கைகள் அனைத்தும் ஓவிய வல்லுநர்கள் பணிபுரிந்திருப்பார்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. இங்குள்ள ஓவியங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. சைவ வைணவ சமயங்களின் எழுச்சிக்குப் பின் அச்சணந்தி என்ற சமணத்துறவி தமிழகம் முழுவதும் கால்நடையாகவே நடந்து சமணப்பள்ளிகளை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்புதவிகள்
ஆனைமலை சமணக்குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_MON_00095/TVA_MON_00095_மத...

  • TVA_MON_00095/TVA_MON_00095_மத...

  • TVA_MON_00095/TVA_MON_00095_மத...

  • TVA_MON_00095/TVA_MON_00095_மத...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 90
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்