பத்துத் தூண் (10 தூண்கள்)
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | பத்துத் தூண் (10 தூண்கள்) |
|---|---|
| அமைவிடம் | விளக்குத்தூண் |
| ஊர் | மதுரை |
| வட்டம் | மதுரை |
| மாவட்டம் | மதுரை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி. 1636 |
|
விளக்கம்
திருமலை நாயக்கர் அரண்மனையின் ஒரு பகுதி ரங்கவிலாசம் என்பது. அதில் திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் என்பவர் வசித்தார். அந்த ரங்க விலாசத்தின் தூண்கள் தான் இந்த பத்துத் தூண்கள். ரங்க விலாசத்தின் மற்றைய பகுதிகள் மறைந்துவிடன. இப்பொழுது எஞ்சியுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை பகுதிக்கு அப்பொழுது சுவர்க்க விலாசம் என்று பெயர் இருந்தது. இவற்றை திருமலை நாயக்கர் கட்டினார். |
|
| பாதுகாக்கும்நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, கூடலழகர் பெருமாள் கோயில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் |
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் தலைசிறந்தவரான திருமலை நாயக்கரின் அரண்மனை வரலாற்றுச்சின்னமாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனை மிகப்பரந்த பரப்பளவில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. அரண்மனையின் இரங்கவிலாசம் என்று அழைக்கப்படும் பகுதி முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது. அப்பகுதியின் எஞ்சியுள்ளவை இந்த பத்துத் தூண்கள் மட்டுமே. |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
6 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 24 Sep 2018 |
| பார்வைகள் | 204 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |