புள்ளலூர் நினைவிடம்
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | புள்ளலூர் நினைவிடம் |
|---|---|
| அமைவிடம் | புள்ளலூர் |
| ஊர் | புள்ளலூர் |
| வட்டம் | திருமால்பூர் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.1780-81 |
|
விளக்கம்
அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம்-திருப்பதி சாலையில் திருமால்பூர் ரயில் நிறுத்தத்திற்கு முன்பு இடது புற குறுகிய கிராம சாலையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் புள்ளலூர் அமைந்துள்ளது. பொள்ளிலூர் போரில் வீர மரணம் அடைந்த ஆங்கில தளபதிகளான ஜார்ஜ் பிரவுன் மற்றும் ஜேம்ஸ் ஹில்சொப்பின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவு சின்னங்கள் இங்கு அமைந்துள்ளன. இந்த நினைவு சின்னங்களை அவ்வூர் மக்கள் கோரி(Ghori) என்ற அழைப்பார்கள். நெல்வயல்கள் பரந்துவிரிந்த நிலத்தின் நடுவில் பாழடைந்த உயரமான 2 நினைவு சின்னங்கள் தென்படுகின்றன. இரண்டு சின்னங்களும் உயரமான தளத்தில் கட்டப்பட்டு இருபுறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நினைவு சின்னங்களின் கிழக்குப் பார்த்த சுவரில் போரில் உயிர் துறந்த ஆங்கில தளபதிகளான ஜார்ஜ் பிரவுன் மற்றும் ஜேம்ஸ் ஹில்சொப் ஆகியவர்களின் நினைவாக கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் காலத்தின் தேய்மானத்தால் அழியும் நிலையில் காணப்பட்டன. பொள்ளிலூர் போர் இரண்டாம் ஆங்கில மைசூர் போரை சேர்ந்தது. 1780ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி ஆங்கிலத் தளபதி ஜார்ஜ் பெய்லி தலைமையில் கிழக்கிந்திய நிறுவனமும் திப்பு சுல்தான் தலைமையில் உள்ள மைசூர் ராஜ்ஜியமும் போரிட்டனர். இந்தப் போரில் திப்பு சுல்தானின் கை ஓங்கியிருந்தது. மைசூர் ஏவுகணைகளை திறம்பட பயன்படுத்தி ஆங்கில படையினரை திணற வைத்தார். ஏவுகணை தாக்குதலால் ஆங்கில படை பெருத்த சேதம் அடைந்து பல போர் வீரர்கள் கொல்லப்பட்டு மீதமுள்ளோர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இந்திய மண்ணில் பிளாசி மற்றும் பக்சார் போர்களில் வெற்றி பெற்று நம் நாட்டில் பாதம் பதித்த ஆங்கிலேயர்கள் இந்தப் போரில் படுதோல்வி அடைந்தனர். இப்போரில் வீர மரணம் அடைந்த ஆங்கிலேயத் தளபதிகள் ஜார்ஜ் பிரவுன் மற்றும் ஜேம்ஸ் ஹில்சொப் ஆகியோரின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னமாகும். |
|
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | திருமால்புரம் சிவன் கோயில், கோனார் கோயில் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | திரு. குமரன் சண்முகம் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
புள்ளலூர் போர் (The Battle of Pollilur (Pullalur) புள்ளலூரில் 1780 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 தேதியன்று நடைபெற்றது. இஃது இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இந்தப் புள்ளலூர்ப் போரில் கர்னல் பெய்லியின் படைக்கு திப்பு சுல்தானின் படையால் பெருத்த சேதம் ஏற்பட்டது. இப்போரில் ஏராளமான படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இப்போரில் இறந்த இரண்டு ஆங்கிலேயப் படைத் தளபதிகளுக்கு எடுக்கப்பட்ட நினைவிடம் இதுவாகும். |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
6 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 Feb 2019 |
| பார்வைகள் | 90 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |