தவ்வை
தவ்வை
சிற்பத்தின் பெயர் | தவ்வை |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
வட்டம் | ஜெயங்கொண்டம் |
மாவட்டம் | அரியலூர் |
அமைவிடத்தின் பெயர் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
சிற்பத்தின் வகை | தாய்த்தெய்வ சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
தவ்வை அமர்ந்த கோலத்தில் உள்ளாள். பெரிய வயிறும் பருத்த தனங்களுமாய் அன்னை காட்டப்பட்டுள்ளாள். வட்ட வடிவ முகங்கொண்டவளாய் அமர்ந்துள்ளாள். இச்சிற்பத் தொகுதி பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாய் காணப்படுகின்றது. தவ்வையின் வலது புறம் அமர்ந்துள்ள மாந்தனின் உருவம் சிதைந்து உள்ளது. அன்னையின் இடதுபுறம் அமர்ந்துள்ள மாந்தி இடது காலை தொங்க விட்டு, வலது காலை குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். வலது கையில் மலரைப் பிடித்துள்ளாள். இடது கை தொடை மீது வைக்கப்பட்டுள்ளது. நடுவில் அமர்ந்துள்ள தவ்வைத் தாய் இரு கைகளிலும் மலர்களைப் பிடித்துள்ளாள். கரண்ட மகுடம் அன்னைக்கு அழகு செய்கிறது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பழையோளின் இச்சிற்பத் தொகுதி சோழர் கால கலைப் பாணியைக் கொண்டதாகும். தவ்வை நடுவில் அமர்ந்திருக்க, இருபுறமும் மாந்தனும், மாந்தியும் காட்டப்பட்டுள்ளனர். இச்சிற்பத் தொகுதியில் மாந்தனின் உருவம் உடைந்துள்ளது. |
தவ்வை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |