தென்முகக்கடவுள்
தென்முகக்கடவுள்
சிற்பத்தின் பெயர் | தென்முகக்கடவுள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
வட்டம் | ஜெயங்கொண்டம் |
மாவட்டம் | அரியலூர் |
அமைவிடத்தின் பெயர் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் வீராசனத்தில் அமர்ந்துள்ளார்.மார்பு வரை மட்டுமே இச்சிற்பம் காணவியலுகிறது. சடைபாரம் கொண்டுள்ளார். சொல்லாமல் சொல்லி பொருளுரைக்கும் குரு வடிவாய்த் திகழ்கிறார். பின்னிரு கரங்களில் நாகமும், அக்கமாலையும் வைத்துள்ளார். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்திசைக் கடவுள் என்று பொருள். கோயிலில் தெற்கு நோக்கிய கோட்டத்தில் இவரை வைத்தல் மரபு. எனவே தென்முகக் கடவுள் எனவும் அழைக்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தி என்பதற்கு அகத்தியர் என்ற பொருளையும் தமிழ் அகராதி சுட்டுகிறது. தட்சிணாமூர்த்தி சின்முத்திரையுடன் காணப்படுவார். |
தென்முகக்கடவுள்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
பார்வைகள் | 20 |
பிடித்தவை | 0 |