சிற்பம்
தவ்வை
தவ்வை
சிற்பத்தின் பெயர் | தவ்வை |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வேலூர் அரசு அருங்காட்சியகம் |
ஊர் | வேலூர் |
வட்டம் | வேலூர் |
மாவட்டம் | வேலூர் |
அமைவிடத்தின் பெயர் | வேலூர் அரசு அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | புடைப்புச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
தவ்வை நீண்ட பலகைக் கல்லில் அமர்ந்துள்ளாள். வலது கை காக்கும் கரமாகவும், இடது கையை அமர்பலகையில் ஊன்றியபடியும் உள்ளாள். மடிப்புகளுடன் கூடிய இடையாடை உடுத்திய தேவியின் முகம் சிதைந்துள்ளது. கண்ணிமாலை சூட்டி கரண்டமகுடம் தரித்துள்ள தேவியின் ஊன்றியுள்ள இடது கையின் கீழே பெண்ணொருத்தி தலையில் பொருள் ஒன்றைப் வைத்துள்ளாள். சாமரப்பெண்ணொருத்தி பணி செய்கிறாள். வலதுபுறம் காகம் ஒன்று நிற்கிறது. அருகில் நிற்கும் உருவம் தெளிவாக இல்லை.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கி.பி.9-ஆம் நூற்றாண்டு காலத்திய இச்சிற்பம் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள வெண்மணி என்ற ஊரில் இருந்து கொணரப்பட்டு, வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. பண்டைய தாய்த் தெய்வ வழிபாட்டில் தவ்வை வணக்கம் சிறப்பிடம் பெற்றுள்ளமை புலப்படுகின்றது.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்
தவ்வை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |