சிற்பம்
தவ்வை
தவ்வை
சிற்பத்தின் பெயர் | தவ்வை |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வேலூர் அரசு அருங்காட்சியகம் |
ஊர் | வேலூர் |
வட்டம் | வேலூர் |
மாவட்டம் | வேலூர் |
அமைவிடத்தின் பெயர் | வேலூர் அரசு அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | புடைப்புச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
தவ்வை நடுவில் அமர்ந்திருக்க இருபுறமும் மாந்தனும் மாந்தியும் உடன்கூட்டமாக அமர்ந்துள்ளனர். தவ்வையின் மூக்கும் வாயும் சிதைந்துள்ளது. தவ்வையின் கரண்டமகுடமும், மகர குண்டலங்களும், கண்டச்சரமும் இன்புறத்தக்கன. இடையில் நூலாடை அணிந்துள்ளார். கால்களை விரித்து அமர்ந்துள்ளாள். இடது கையை இடது தொடையின் மீது வைத்து, வலது கையால் காக்கும் முத்திரை காட்டுகிறாள். தவ்வையின் இடதுபுறம் மாந்தியும், வலதுபுறம் மாந்தனும் அமர்ந்துள்ளனர்.மேலே காக்கை, கீழே கழுதையும் காட்டப்பட்டுள்ளன. தேவியின் வலதுபுறம் சிற்பம் சிறிது உடைந்துள்ளது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தவ்வை தன் உடன்கூட்டத்தாருடன் அமர்ந்த நிலையிலுள்ள இச்சிற்பம், வேலூர் வட்டத்திலுள்ள சதுப்பேரி என்னுமிடத்தில் இங்கு கொணரப்பட்டது. இச்சிற்பத்தின் உருவமைதியை நோக்குங்கால் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் கருதலாம்.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்
தவ்வை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |