கல்வெட்டு
புகளுர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | புகளுர் |
|---|---|
| ஊர் | புகளுர் / வேலாயுதம்பாளையம் |
| வட்டம் | குளித்தலை |
| மாவட்டம் | கரூர் |
| அமைவிடத்தின் பெயர் | ஆறுநாட்டார்மலை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
தெற்கு நோக்கிய குகைத்தளத்தில் கிழக்குப் புறம் அமைந்த சிறு குகைத்தளத்தின் பண்படுத்தப்படாத பாறைத் தரையில் இக்கல்வெட்டுள்ளது. பெரிதும் தேய்ந்துள்ளது. எனினும் நன்கு காணக் கூடியதாய் உள்ளது. இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. ‘நலிய்ஊர்’ என்பதில் ‘ல்’ ஒற்று சேர்த்து நல்லி ஊர் என்றும், 'பிடன்’ என்பதில் ‘ட்’ சேர்த்து பிட்டன் என்றும், ‘கொறி’ என்பதில் ‘ற்’ சேர்த்து கொற்றி என்றும் 'பளி’ என்பதில் ‘ள்’ சேர்த்து பள்ளி என்றும் கொள்ள வேண்டும் இந்த புனித இடம் அல்லது கற்படுக்கை (பள்ளி) நல்லியூரைச் சேர்ந்த பிட்டன் என்பவரது இளைய மகளான (குறும் மகள்) கொற்றி என்பவளால் செய்யப்பட்டது என்பது இக்கல்வெட்டின் பொருளாகும்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 108 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |