கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | குடந்தை நாகேசுவரர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நாகேசுவரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குப்புறம் குமுதப்படையில் உள்ளது. தென்கரை நாட்டுக் கிழார்க் கூற்றத்து ஆயிரத்தளித்தேவதான ஊரைச் சேர்ந்த வில்லவன் பேரரையன் ஆயின ...... திருக்கீழ்க் கோட்டத்துப் பெருமானடி களுக்கு அமுதுபடிக்கும், சிலர் உண்ணவும் [சாலா போகம் பொன் அளித்த செய்தியைத் தருகிறது. கோயிலின் தெற்குச் சுவரில் மற்றொரு கல்வெட்டு மதிரை கொண்ட பரகேஸரிவர்மனின் (906 - 47) ஆட்சியாண்டைச் சேர்ந்த சிதைந்த கல்வெட்டாகும். இக்கோயிலில் திருவிழா எடுப்பதற்காக, தென் கரை நாட்டுக் கிழார் கூற்றத்து ஆயிரத்தளி தேவதானமான காவலூரைச் சேர்ந்த வில்லவன் பேரரையன் என்பான் 105 துளைப்பொன் கொடையாகக் கொடுத்துள்ளான்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 55 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |