சிற்பம்
நின்ற சீர் நெடுமாறனார்
நின்ற சீர் நெடுமாறனார்
சிற்பத்தின் பெயர் | நின்ற சீர் நெடுமாறனார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
63 நாயன்மார்களுள் ஒருவரான பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாறன்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறன். இவன் சோழ இளவரசி மங்கயர்க்கரசியாரின் கணவர். இம்மன்னன் கூன்பாண்டியன் எனவும் அழைக்கப்படுபவன். நெடுமாறனார், சமண் வலையிலகப்பட்டிருந்து, தன் பட்டத்து அரசியார் மங்கையர்க்கரசியாரும், அமைச்சரும் குலச்சிறையாரும் கொண்ட சிவப்பற்றினாலே மதுரை வந்த ஆளுடைய பிள்ளையாரருளாலே சைவத்தில் மீண்டு வந்து சிவநெறி பெருகச் செங்கோல் செலுத்தினார். போரேற்று வந்து எதிர்த்த வடபுல மன்னரை நெல்வேலிச் செருக்களத்தில் வெற்றி கொண்டனர். சிவனுக்கேற்ற திருத்தொண்டுகள் எல்லாம் செய்து, நீண்டகாலம் திருநீற்று நெறி விளங்கப் புகழ் பெருக அருள் பெருக அரசாட்சி செய்திருந்து சிவனுலகடைந்து பணிந்து இன்பமுற்றிருந்தார். பாண்டிய மன்னன் வீற்றிருக்கும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. மேலே நெடு மாறனார் என்ற மன்னனது பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
நின்ற சீர் நெடுமாறனார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
சிறப்புலி நாயனார்
சிறப்புலி நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
17
|
0
|
0
|
0
உமையும் முருகனும்
உமையும் முருகனும்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
21
|
0
|
0
|