சிற்பம்

செருத்துணையார்

செருத்துணையார்
சிற்பத்தின் பெயர் செருத்துணையார்
சிற்பத்தின்அமைவிடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஊர் தாராசுரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
விளக்கம்
செருத்துணை நாயனார்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண்குடியில் தோன்றியவர்செருத்துணையார். சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர். இவர் திருவாரூர் சென்று இறைவரது திருக்கோயில் திருமுன்றனில் விளங்கும் பணிகளைக் காலந்தோறும் செய்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவ்வண்ணம் வழிபட்டு வரும் ஒரு நாள் பல்லவ அரசர் கழற்சிங்கரது பட்டத்து அரசியார் அங்கு பூ மண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப்பூவை எடுத்து முகர்ந்ததனைக் கண்டார். இறைவனுக்கான மலரை அரசியார் முகர்ந்தது கண்டு வெகுண்ட செருத்துணையார் அரசியென்றும் பாராமல் கையில் உள்ள கத்தி கொண்டு அவளது மூக்கினை அரிந்தார். விளக்கம் கேட்ட அரசர் கழற்சிங்கரிடமும் துணிவுடன் தன் செயலைக் கூறினார். இவ்வாறு திருத்தொண்டு உலகில் விளங்கச் செய்து சிவனடி நீழலில் செர்ந்து இன்பமுற்றார்.
குறிப்புதவிகள்
செருத்துணையார்
சிற்பம்

செருத்துணையார்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்