சிற்பம்
விஷ்ணுதுர்க்கை
விஷ்ணுதுர்க்கை
சிற்பத்தின் பெயர் | விஷ்ணுதுர்க்கை |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | முக்தேஸ்வரர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சாக்தம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
நான்கு திருக்கைகளுடன் சமபாதத்தில் நிற்கும் விஷ்ணு துர்க்கை
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கரண்ட மகுடத்தினராய் நெற்றியில் கண்ணி மாலையணிந்து நீள்காதுகளில் பனையோலைச்சுருள்கள் விளங்க, மார்பில் கச்சணிந்து, கழுத்தில் கண்டிகை, முத்துச்சரம் திகழ, நான்கு கைகளில் மேற்கைகளில் வலதில் பிரயோகச் சக்கரமும், இடதில் திருவாழியும் கொண்டுள்ளார். முன்கைகளில் வலது அபய முத்திரை காட்டியும், இடது கை இடையில் வைத்தவாறு கடியவலம்பிதமாகவும் காட்டப்பட்டுள்ளன. அரையாடை அணிந்துள்ள தேவியின் இடையில் முகப்புடன் கூடிய இடையணி உள்ளது. வயிற்றில் உதரபந்தம் அமைந்துள்ளது. இடையாடையின் முடிச்சுகள் இடையின் பின்புறம் காட்டப்பட்டு கணுக்கால் வரை நீண்டு தொங்குகின்றன. கால்களில் வீரக்கழல்கள் மிளிர்கின்றன. தேவியின் இருபுறமும் காவற்பெண்டிர் கையில் ஆயுதங்களுடன் நிற்கின்றனர்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
விஷ்ணுதுர்க்கை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |