சிற்பம்
சந்திரன்
சந்திரன்
சிற்பத்தின் பெயர் | சந்திரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | முக்தேஸ்வரர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
தட்சனின் சாபத்தால் தன் கலையிழந்த சந்திரன் சிவபெருமானை சரணடையும் நிலை
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திங்களோனின் பதினாறு கலைகளும் தட்சனின் சாபத்தால் ஒவ்வொன்றாக குறைந்து பிறையோன் களையிழக்கும் காலத்தில் சடையானை சரணடையும் இளமதியனாக சந்திரன் நின்ற நிலை சிற்பம். அரையாடை அணிந்துள்ள சந்திரன் தனது வலது காலை ஊன்றி, இடதுகாலை சற்று நகர்த்தி வளைத்து வைத்துள்ளார். இடையாடையின் முடிச்சு இடது தொடையில் காட்டப்பட்டுள்ளது. சந்திரனின் தலையின் பின்புறம் ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. இரு கைகளில் வலது கையை இடையில் வைத்தவாறும், இடது கையில் மலரைப் பிடித்தவாறும், கடகவளை, முன்வளைகள் அணிந்து உள்ளார். முப்புரிநூல் காட்டப்பட்டுள்ளது. முன் தோளுக்கு கீழே தொங்கும் நீள்காதுகளில் அணிகலன்கள் அழகு செய்கின்றன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சந்திரன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
விஷ்ணுதுர்க்கை
விஷ்ணுதுர்க்கை
சாக்தம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
14
|
0
|
0
|
0
ஆலிங்கனமூர்த்தி
ஆலிங்கனமூர்த்தி
சைவம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
15
|
0
|
0
|