சிற்பம்
ஆலிங்கனமூர்த்தி
ஆலிங்கனமூர்த்தி
சிற்பத்தின் பெயர் | ஆலிங்கனமூர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | முக்தேஸ்வரர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
உமையை ஒருகையால் அணைத்தபடி நிற்கும் சிவனார் ஆலிங்கன பெருமான்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நான்கு திருக்கைகளுடன் வலது காலை சமபாதத்தில் ஊன்றி இடது காலை சற்று உயரத்தில் இருத்தியபடி (ஊர்த்துவஜானு) நிற்கும் சடையார் ஜடாமகுடம் அணிந்துள்ளார். பின்னிரு கைகளில் வலதில் மழுவும், இடதில் உள்ளது மானாய் இருக்கலாம் (சிதைந்துள்ளது) கொண்டுள்ளார். வலது முன் கை கடியவலம்பிதமாக இடையில் வைத்தவாறும், இடது முன் கை அருகில் நிற்கும் அன்னையின் தோளை அணைத்தவாறும் காட்டப்பட்டுள்ளன. அரையாடை இறைவரின் முப்புரிநூல் வலது கை வழியே உடலின் பின்பக்கம் செல்கிறது. வயிற்றில் உதரபந்தம் (வயிற்றுப் பகுதியில் அணியப்படும் ஒரு வகை அணி. இவ்வணி வயிற்றுப்பகுதியையும், மார்புப் பகுதியையும் பிரித்துக் காட்டும்.) காட்டப்பட்டுள்ளது. கைகளில் கடகவளை, முன்வளை, தோள்வளைகள் அணி செய்திட, கால்களில் வீரக்கழல்கள் விளங்குகின்றன. அருகில் நிற்கும் அன்னையின் முகம் சிதைந்துள்ளது. இடது காலை ஊன்றி வலது காலை சற்றே நகர்த்தி வளைத்து நிற்கிறார். இருகைகளில் இடது கை பல்லவ முத்திரை எனப்படும் எழிற் கையாகவும், வலது கை மலரைப் பிடிக்கும் முத்திரையாகவும் அமைந்துள்ளது. இறைவனைப் போலவே கைவளைகள் காட்டப்பட்டுள்ளன. கணுக்கால் வரை ஆடையணிந்துள்ளார். அம்மையப்பர் இருவருக்கும் கழுத்தணிகளை அறியக்கூடவில்லை.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
ஆலிங்கனமூர்த்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |