சிற்பம்

முருகன்

முருகன்
சிற்பத்தின் பெயர் முருகன்
சிற்பத்தின்அமைவிடம் முக்தேஸ்வரர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை கௌமாரம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
வீரனாய் நிற்கும் சேயோன் முருகன்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சமபாதத்தில் நிற்கும் முருகன் நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். கரண்ட மகுடராய், நெற்றியில் கண்ணிமாலை துலங்க, நீள்காதுகளில் பனையோலைச் சுருள்கள் திகழ, மார்பின் குறுக்கே வீரச்சங்கிலி அணிந்தவராய் சேயோன் விளங்குகிறார். செவ்வேள் என சான்றோர் ஏத்திப் போற்றும் கொற்றவையின் சிறுவன் முகப்புடன் கூடிய இடையணி பூண்டு, வீரருக்குரிய அரையாடை அணிந்து, ஆடையின் முடிச்சுகள் வலப்புறம் இருக்க, முன்னிரு கைகளில் இடது கை இடையில் வைத்தவாறு நின்ற நிலையில் உள்ளார்.
குறிப்புதவிகள்
முருகன்
சிற்பம்

முருகன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 19
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்