Back
சிற்பம்

இராவணானுக்கிரகமூர்த்தி

இராவணானுக்கிரகமூர்த்தி
சிற்பத்தின் பெயர் இராவணானுக்கிரகமூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் முக்தேஸ்வரர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
சிவநேசனான இராவணன் தன் அன்பின் மிகுதியால் கயிலை மலையை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பி, தன் இருபது கைகளாலும் மலையைப் பெயர்க்கும் காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கயிலை மலையில் சிவனும் உமையும் அமர்ந்திருக்க அம்மலையை தன் இருபது கரங்களால் இராவணன் பெயர்த்தெடுக்கிறான். கருடாசனத்தில் இராவணன் இருபது கைகளை இருபுறம் விரித்து மலையைப் பெயர்க்கிறான். மலையின் உச்சி முகட்டில் இறைவன் இடதுகாலை குத்துகாலிட்டு, வலது காலை மடக்கி லலிதாசனத்தில் அமர்ந்துள்ளார். அருகில் உமையாள் இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். தேவி இருகைகளில் வலது கையை ஊன்றிய கையாகவும், இடது கையில் மலர்ப்பிடிக் கையாகவும் கொண்டுள்ளார். இறையனார் நான்கு திருக்கைகள் கொண்டுள்ளார். இராவண அனுக்கிரகமூர்த்தியின் பின்னே கணம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. தேவியின் காலடியில் இரண்டு கணங்கள் உள்ளன. ஒன்று ஆடலிலும், மற்றொன்று இசை முழக்குவதிலும் ஈடுபட்டுள்ளன. அதன் கீழே ஆண், பெண் இரு கணங்களில் பெண் அமர்ந்த நிலையிலும் ஆண் கணம் நின்ற நிலையிலும் உள்ளன. இவர்கள் அனைவரும் கூடியிருக்கும் கைலாய மலையை இராவணன் பெயர்க்கிறான். அவனுக்கு பன்முகங்கள் காட்டப்பட்டுள்ளன. இராவணனின் வலது முன் கை உயர்த்தி மலையைத் தூக்குகிறான். ஆடையணிகள் நன்கு காட்டப்பட்டுள்ளன. இருபது கைகளிலும் கையணிகள் காட்டப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
இராவணானுக்கிரகமூர்த்தி
சிற்பம்

இராவணானுக்கிரகமூர்த்தி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 17
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்