Back
சிற்பம்

காலாந்தக மூர்த்தி (காலாரி)

காலாந்தக மூர்த்தி (காலாரி)
சிற்பத்தின் பெயர் காலாந்தக மூர்த்தி (காலாரி)
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் திருவாலீஸ்வரம்
வட்டம் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன்
விளக்கம்
காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை காலால் எட்டி உதைத்து, மிரட்டும் பாணியில் காலாந்தகர் நிற்கிறார். எட்டுத் திருக்கைகளில் ஆயுதங்களைத் தாங்கியுள்ள நிலையில் காலாரி காட்டப்பட்டுள்ளார். வலது காலை ஊன்றி, இடது காலை முழங்கால் வரை மடக்கி ஏகபாத ஸ்தானகத்தில் கோணத்தில் சாய்வாக நின்றுள்ளார். தொடை வரை அரையாடை அணிந்துள்ள இறைவனின் காலடியில் சாய்ந்த நிலையில் சிவலிங்கம் உள்ளது. அதற்கு முன்னால் எமன் கவிழ்ந்த நிலையில் கிடக்கிறான். கைகளில் சூலம், குறுவாள், வில், அம்பு, வாள், கேடயம், மணி ஆகியவை ஆயுதங்களாக உள்ளன. கழுத்தில் கண்டிகை, சரப்பளி, மார்பில் முப்புரிநூல், இடைக்கட்டுடன் கூடிய அரைப்பட்டிகை, கைகளில் கேயூரம், முன்வளைகள் அணிந்துள்ளார்.
குறிப்புதவிகள்
காலாந்தக மூர்த்தி (காலாரி)
சிற்பம்

காலாந்தக மூர்த்தி (காலாரி)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்