சிற்பம்
முருகன்
முருகன்
சிற்பத்தின் பெயர் | முருகன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | கௌமாரம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
சூரனை வதைத்த பின் இந்திரனின் மகளான தெய்வயானையை முருகன் கைத்தலம் பற்றும் காட்சி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கரண்ட மகுடம் அணிந்து, நெற்றியில் கண்ணி மாலை சூடி, முகத்தில் புன்னகை தவழ தெய்வயானையை கைத்தலம் பற்றுகிறார். சூரனை அழித்த வீரனாகிய முருகன் மார்பில் வீரச்சங்கிலி அணிந்துள்ளார். அரையாடை அணிந்துள்ள கொற்றவை சிறுவன் இரண்டு கைகள் கொண்டுள்ளார். வலது கையால் இந்திரன் மகளின் வலக்கையை பற்றியும், இடது கையை நண்டு பிடியாக கடக முத்திரையிலும் வைத்துள்ளார். செவ்வேளின் நீள்காதுகளில் குண்டலங்கள் அணிந்து தோள்களில் நீண்டுள்ளன. பழையோள் குழவியின் வலது புறத்தில் தலைகுனிந்து நாணத்துடன் தேவி நிற்கிறாள். கரண்டமகுடம் அணிந்த தேவி கணுக்கால் வரை நீண்ட பட்டாடை அணிந்துள்ளாள். ஒரு காலை முன்னே வைத்தும் ஒரு காலை பின்னே வைத்தும் நிற்கிறாள். அணிகலன்கள் அறியக்கூடவில்லை.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
முருகன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |