சிற்பம்
காலாந்தக மூர்த்தி (காலாரி)
காலாந்தக மூர்த்தி (காலாரி)
சிற்பத்தின் பெயர் | காலாந்தக மூர்த்தி (காலாரி) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | திருவாலீஸ்வரம் |
வட்டம் | அம்பாசமுத்திரம் |
மாவட்டம் | திருநெல்வேலி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
விளக்கம்
காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சிவபெருமானை நாள்தோறும் பூஜிக்கும் 16 வயதான இளஞ்சிறான் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை காலால் எட்டி உதைத்து, காலன் மேல் வலது காலை வைத்து மிதித்து, இடது காலை உயர்த்தி தூக்கி குஞ்சித பாதமாக் கொண்டு, ஊர்த்துவஜானுவில் வைத்து, யமனை எச்சரிக்கும் நிலையில் உள்ள அட்டவீரட்டர்களில் ஒருவரான காலாந்தகமூர்த்தி எட்டு திருக்கைகள் பெற்றுள்ளார். முன் வலது கையில் சூலத்தை ஏந்தியவாறும், பிற வலது கைகளில் மழு, பாசக்கயிறு, தண்டிக்கும் முத்திரை ஆகியவற்றைக் கொண்டும், இடது முன் கை இடது தொடையில் வைத்தவாறும், பிற கைகளில் வியப்பு முத்திரை, எச்சரிக்கை முத்திரை, நாகபாசம் ஆகியன கொண்டும் உள்ளார். இறைவன் கோபக்கனலாக உள்ளார். அவரின் காலடியில் காலன் மரண பயங்கொண்டு தலையைத் திருப்பி சிவனாரைப் பார்த்தபடி வீழ்ந்துள்ளான். காலாரியின் வலது காலின் கீழே சிவலிங்கத்தை அணைத்தவடி மார்க்கண்டேயன் காட்டப்பட்டுள்ளான். காலாரிக்கு அலங்கரிக்கப்பட்ட ஜடாமகுடம் எழில் சேர்க்கிறது. நீள்காதுகளில் வலதில் மகர குண்டலமும், இடதில் பத்ரகுண்டலமும் அணிந்துள்ளார். கழுத்தில் கண்டிகை, சரப்பளி ஆகிய அணிகள் காட்டப்பட்டுள்ளன. கால்களில் வீரக்கழல் அணிந்துள்ளார். கைகளில் தோள்வளைகளும், இரண்டு முன்வளைகளும் அணியப்பட்டுள்ளன. வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. இடது தோளின் வழியே முப்புரிநூல் செல்கிறது. அரையாடை அணிந்துள்ள இறையனார் முகப்புடன் கூடிய இடைக்கட்டு கொண்டுள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
காலாந்தக மூர்த்தி (காலாரி)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |