Back
சிற்பம்
புலிக்குத்திப்பட்டான் கல்
சிற்பத்தின் பெயர் புலிக்குத்திப்பட்டான் கல்
சிற்பத்தின்அமைவிடம் காங்கேயம் புலிக்குத்திப்பட்டான் கல்
ஊர் காங்கேயம்
வட்டம் காங்கேயம்
மாவட்டம் திருப்பூர்
அமைவிடத்தின் பெயர் காங்கேயம் ஊர்ப்புறப்பகுதி
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்
புலிக்குத்திப்பட்டான் நடுகல் பலகைக் கல் வடிவில் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. பாய்ந்து கடித்துத் தாக்க வருகின்ற புலியை தன் இடது கையால் தடுத்தவாறு, புலியைக் கொல்வதற்கு தன் வலது கையில் உள்ள குறுவாளினைக் கொண்டு புலியின் மார்பில் குத்தி கொல்கிறான்.ஒரு இயங்கு நிலைத் தன்மையை இப்புடைப்புச் சிற்பம் நமக்குக் காட்டுகிறது. இடையில் இறுக்கிக் கட்டப்பட்டுள்ள முடிச்சுகளுடன் கூடிய அரையாடை அணிந்துள்ள இந்நடுகல் வீரனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. ஓடி வந்து பாய்ந்து தாக்குதல் காட்சி இப்புடைப்புச் சிற்பத்தில் வீரனின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அமைந்துள்ள இந்த புலிக்குத்திப்பட்டான் கல் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாகும்.பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக புலியை தன் கையிலுள்ள குறுவாளால் குத்திக் கொல்லும் வீரனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. புலியுடன் போரிட்டு இறந்த வீரனின் நினைவாக எடுப்பிக்கப்பட்ட இந்த வீரக்கல் புலிக்குத்திப்பட்டான் கல் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. இந்த புலிக்குத்திபட்டான் நடுகல் தற்போது வரை வழிபாட்டில் உள்ளது.
குறிப்புதவிகள்
புலிக்குத்திப்பட்டான் கல்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Mar 2020
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்