அய்யனார்
அய்யனார்
சிற்பத்தின் பெயர் | அய்யனார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | காங்கேயம் புலிக்குத்திப்பட்டான் கல் |
ஊர் | காங்கேயம் |
வட்டம் | காங்கேயம் |
மாவட்டம் | திருப்பூர் |
அமைவிடத்தின் பெயர் | காங்கேயம் ஊர்ப்புறப்பகுதி |
சிற்பத்தின் வகை | புடைப்புச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி. 10-11 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
அய்யனார் ஒரு அரசனைப் போன்று காட்சியளிக்கிறார். நேராக நிமிர்ந்து நேர்கொண்ட பார்வையோடு, வீரக்கழல்கள் துலங்கும் வலது காலை தொங்கவிட்டு, இடது காலை பீடத்தின் மீது குத்துக்காலிட்டு மடக்கி உத்குடிகாசனத்தில் அமர்ந்துள்ள அய்யனின் இருபுறமும் அவரது தேவிமார்கள் தங்கள் கைகளில் மலரினைப் பிடித்தவாறு ஒரு காலை மடக்கி, ஊன்றியுள்ள மற்றொரு காலின் தொடை மீது கையை இருத்தியபடி பீடத்தின் மீது அமர்ந்துள்ளனர். அய்யனின் இருபுறமும் மேலே சாமரப்பெண்கள் உள்ளனர். நடுவில் அய்யன் தலையில் துலங்கும் தீச்சுடர் போன்ற ஜடாபாரத்துடனும், நெற்றியில் கண்ணி மாலை, மார்பில் முப்புரிநூல் (யக்ஞோபவீதம்), நீள்காதுகளில் பத்ர குண்டலங்கள், மார்பில் உதரபந்தம், இடையில் மடிப்புகளுடன் கூடிய ஆடையை அணிந்து, வலது கையில் செண்டை ஏந்தியுள்ளார். முன்னோக்கி நீட்டி, இடது முழங்காலில் வைத்துள்ளார். கழுத்தணிகள், கையணிகள் ஆகியன சிற்பத்தில் உள்ள அனைத்துருவங்களுக்கும் அணி செய்கின்றன. அய்யன் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழே பன்றி உருவமும், நாய் உருவமும் புடைக்கப்பட்டுள்ளன. இவையிரண்டும் வேட்டைத் தெய்வமான அய்யனாருடன் தொடர்புடையனவாக்க் காட்டப்பட்டுள்ளன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.வேலுதரன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பலகைக் கல்லில் அமைந்துள்ள இப்புடைப்புச் சிற்பத் தொகுதி, அய்யனார் உடனுறை பூரணை, புஷ்கலா தேவியுடன் கூடியதாக காட்டப்பட்டுள்ளது. அமர்ந்துள்ள அய்யனாரின் இருபுறமும் அவரது தேவியர் கைகளில் மலர்ச்செண்டுடன் அமர்ந்துள்ளனர். மேலே சாமரப் பெண்கள் இருபுறமும் நிற்கின்றனர். |
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 . |
அய்யனார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 Mar 2020 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |