சிற்பம்
அய்யனார்
சிற்பத்தின் பெயர் அய்யனார்
சிற்பத்தின்அமைவிடம் காங்கேயம் புலிக்குத்திப்பட்டான் கல்
ஊர் காங்கேயம்
வட்டம் காங்கேயம்
மாவட்டம் திருப்பூர்
அமைவிடத்தின் பெயர் காங்கேயம் ஊர்ப்புறப்பகுதி
சிற்பத்தின் வகை புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி. 10-11 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்
அய்யனார் ஒரு அரசனைப் போன்று காட்சியளிக்கிறார். உத்குடிகாசனத்தில் அமர்ந்துள்ள அய்யனின் இருபுறமும் அவரது தேவிமார்கள் தங்கள் கைகளில் மலரினைப் பிடித்தவாறு தலைவனை நோக்கியபடி அமர்ந்துள்ளனர். அய்யனின் இருபுறமும் மேலே சாமரப்பெண்கள் உள்ளனர். நடுவில் அய்யன் தலையில் துலங்கும் ஜடாபாரத்துடனும், நெற்றியில் கண்ணி மாலை, மார்பில் சன்னவீரம், நீள்காதுகளில் மகர குண்டலங்கள், மார்பில் உதரபந்தம், இடையில் மடிப்புகளுடன் கூடிய ஆடையை அணிந்து, வலது கையில் செண்டை ஏந்தியுள்ளார். இடது கையை முன்னோக்கி நீட்டி, இடது முழங்காலில் டோல முத்திரையில் வைத்துள்ளார். கழுத்தணிகள், கையணிகள் ஆகியன சிற்பத்தில் உள்ள அனைத்துருவங்களுக்கும் அணி செய்கின்றன.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
பலகைக் கல்லில் அமைந்துள்ள இப்புடைப்புச் சிற்பத் தொகுதி, அய்யனார் உடனுறை பூரணை, புஷ்கலா தேவியுடன் கூடியதாக காட்டப்பட்டுள்ளது. அமர்ந்துள்ள அய்யனாரின் இருபுறமும் அவரது தேவியர் கைகளில் மலர்ச்செண்டுடன் அமர்ந்துள்ளனர். மேலே சாமரப் பெண்கள் இருபுறமும் நிற்கின்றனர்.
குறிப்புதவிகள்
அய்யனார்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Mar 2020
பார்வைகள் 17
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்