இராமச்சந்திரபுரம் முற்காலப் பாண்டியர் குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | இராமச்சந்திரபுரம் முற்காலப் பாண்டியர் குடைவரை |
|---|---|
| அமைவிடம் | இராமச்சந்திரபுரம் |
| ஊர் | இராமச்சந்திரபுரம் |
| வட்டம் | மானூர் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம் இராமச்சந்திரபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிறு பாறைக்குன்றின் தொடரில் அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயிலானது முற்றுப் பெறாத குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. இக்குடைவரையின் மூத்ததேவியான தவ்வையின் புடைப்புச் சிற்பம் காணப்படுகின்றது. தவ்வை தம் உடன்கூட்டத்தாரோடு அமர்ந்த கோலத்தில் இச்சிற்பத்தில் காணப்படுகிறாள். அருகில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்ட பிள்ளையார் உருவம் முற்றுப் பெறவில்லை. இப்பகுதியைச் சேர்ந்த நிலக்கிழார் ஒருவரது செயல்பாடாய் இக்குடைவரை திகழ்கிறது. இக்குடைவரை முற்காலப் பாண்டியரது காலமாய் இருக்கலாம். |
|
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | மானூர், உக்கிரன்கோட்டை அகழாய்விடம், கங்கை கொண்டான் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | திருநெல்வேலி தொல்லியல் கழகம் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த இராமச்சந்திரபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிறு பாறைக்குன்றின் தொடரில் அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயிலானது முற்றுப் பெறாத குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
8 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 14 Feb 2019 |
| பார்வைகள் | 88 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |