சிற்பம்
வாலி-சுக்ரீவன்
வாலி-சுக்ரீவன்
| சிற்பத்தின் பெயர் | வாலி-சுக்ரீவன் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
| ஊர் | தாராசுரம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
| ஆக்கப்பொருள் | கருங்கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
|
விளக்கம்
வாலி-சுக்ரீவன் சண்டையில் இராமன் மறைந்திருந்து அம்பெய்து வாலியை வதை செய்தல்
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சுக்ரீவனுக்கு உதவுவதற்காக இராமன் மறைந்திருந்து அம்பெய்து வாலியைக் கொல்லும் காட்சி. வாலியும் சுக்ரீவனும் ஒருவரையொருவர் பொருதுகின்றனர். இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்துடனும், ஆடையணிகளுடனும் காட்டப்பட்டுள்ளனர். குரங்கு முகத்துடனும், அரையாடை அணிந்த வீரர்களாய் இருவரும் வலமும் இடமுமாக நின்று சண்டை செய்கின்றனர். இடது பக்கம் நிற்பவர் வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கியுள்ளார். வலது கையை இடையில் வைத்து, இடது கையை எதிரில் உள்ளவரோடு சண்டையிடுகிறார். வலது பக்கம் நிற்பவரும் அவ்வாறே உள்ளார். ஆனால் உடலை திருப்பிய நிலையில் நிற்கிறார். அருகே இராமர் வாலியைக் கொல்ல அம்பெய்துகிறார். இராமனின் உடல் திரும்பியுள்ளது. அம்பெய்தும் நிலையில் ஆலிடாசனத்தில் கால்களும் கைகளும் அமைந்துள்ளன.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
வாலி-சுக்ரீவன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 25 |
| பிடித்தவை | 0 |