
குறும்பன்மேடு
அகழாய்விடத்தின் பெயர் | குறும்பன்மேடு |
---|---|
ஊர் | குறும்பன்மேடு |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 1984 |
அகழாய்வு தொல்பொருட்கள் | இரும்புப் பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட பானையோடுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் தக்கிலிகள், சுடுமண்ணாலான மணிகள், பழுப்பு நிற பானையோடுகள், சிவப்பு நிற பானையோடுகள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
விளக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சைப் பெரியகோயிலின் மேற்குப்புறம் 3 கி.மீ. தொலைவில் குறும்பன்மேடு எனும் சிறிய தொல்லியல் மண்மேடு அமைந்துள்ளது. இது செக்கடிமேடு எனப்படும் தொல்லியல் மண்மேட்டிற்கு வெகுஅருகாமையில் இருக்கிறது. குறும்பன்மேட்டில் உள்ள மண்மேடானது 3 மீ. உயரமுள்ளது. இங்கு இரண்டு அகழாய்வுக் குழிகள் போடப்பட்டன. கன்னிமண் வரை சுமார் 100 செ.மீ. ஆழத்திற்கு தோண்டப்பட்டது. இங்கு கிடைத்த அகழாய்வுப் பொருட்கள் அனைத்தும் இடைக்காலச் சோழர் காலத்தவை. இரண்டு பண்பாட்டுக் கூறுகள் இவ்வகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டன. ஒன்று 10-14-ஆம் நூற்றாண்டு வரையிலும், மற்றொரு பண்பாட்டுக் கூறு 14-நூற்றாண்டிற்கு பிறகான வரலாற்றுத் தடயங்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளன. இரும்புப் பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட பானையோடுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் தக்கிலிகள், சுடுமண்ணாலான மணிகள், பழுப்பு நிற பானையோடுகள், சிவப்பு நிற பானையோடுகள் ஆகிய தொல்பொருட்கள் இப்பண்பாட்டுக் கூறுகளில் கண்டெடுக்கப்பட்டன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தமிழ்நாடுஅரசு தொல்லியல் துறை குறும்பன்மேடு அகழாய்வை மேற்கொண்டது. துறையின் மேனாள் இயக்குநர் திரு.இரா.நாகசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர்கள் திரு.ச.செல்வராஜ், திரு. சொ.சாந்தலிங்கம் மற்றும் காப்பாட்சியர் திரு.கலைவாணர் ஆகியோர் பங்குபெற்றனர். |
|
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Nov 2017 |
பார்வைகள் | 23 |
பிடித்தவை | 0 |